மேலும் அறிய

கைரேகை அறுவைசிகிச்சை செய்து குவைத்தில் வேலைவாய்ப்பு! நூதன மோசடி! சிக்கிய கும்பல்!

நாடுகடத்தப்பட்ட நபர்களுக்கு கைரேகை அறுவைசிகிச்சை செய்து மீண்டும் அதே நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைக்கும் நூதன ஏமாற்று வேலை நடந்துள்ளது.

நாடுகடத்தப்பட்ட நபர்களுக்கு கைரேகை அறுவைசிகிச்சை செய்து மீண்டும் அதே நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைக்கும் நூதன ஏமாற்று வேலை நடந்துள்ளது. தெலங்கானா போலீஸார் தான் இந்த ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் மல்காகிரி ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் பிரிவு போலீஸாரும், கடேசர் காவல்துறையினரும் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த அசரவைக்கும் நூதன மோசடி அம்பலமானது.

அண்ணாஜிகுட்டா பகுதியில் ஹேப்பி ரெஸிடன்ஸி என்ற விடுதியில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 4 பேர் சிக்கினர். அவர்கள் 4 பேரையும் கைது செய்தபோது போலீஸார் கைரேகை அறுவை சிகிச்சை என்ற நூதன மோசடி குறித்து அறிந்திருக்கவில்லை. இது சர்வதேச அளவில் விரியும் பெரிய மோசடி வலை என்பதையும் உணரவில்லை. ஆனால் சந்தேகத்தின் பேரில் கைதான 4 பேரிடமும் விசாரிக்க விசாரிக்க குற்றப்பின்னணி போலீஸாரையே அதிர வைத்தது.

அந்த 4 பேருமே கைரேகை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வந்திருந்ததும் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி கைரேகையை ஏற்கெனவே மாற்றி அறுவை சிகிச்சை செய்த இருவரின் தகவலும் கிடைத்தது. இது தொடர்பாக நாக முனேஸ்வர ரெட்டி என்ற ரேடியாலஜிஸ்டும், வெங்கட் ரமணா என்ற அனஸ்தீஸியா டெக்னீசியனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்துகொண்ட இருவரின் ஒருவர் பெயர் சிவ சங்கர ரெட்டி (25), இன்னொருவர் பெயர் ராம கிருஷ்ணா ரெட்டி  (38). 

திடுக்கிடும் தகவல்கள்:

கைது செய்யப்பட்ட இருவரும் சொன்ன தகவல்களைக் கேட்டு போலீஸாரே திகைத்துப் போயுள்ளனராம். இருவரும் இதுவரை கைரேகையை மாற்ற 11 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனராம். ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ரூ.25,000 செலவு பிடிக்குமாம். இப்படியாக அறுவை சிகிச்சை செய்து கைரேகையை மாற்றி இதுவரை மூன்று பேர் குவைத்துக்கு சென்றுவிட்டனர் என்பது தான் கூடுதல் அதிர்ச்சி தகவல். குவைத் சென்ற மூவருமே ஏற்கெனவே இதுபோன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தான். கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான், கேரளா மாநிலங்களிலும் விசாரணை விரிவடைந்துள்ளது.


கைரேகை அறுவைசிகிச்சை செய்து குவைத்தில் வேலைவாய்ப்பு! நூதன மோசடி! சிக்கிய கும்பல்!

எப்படி செய்யப்படுகிறது இந்த அறுவை சிகிச்சை?

இதற்காக விரல் நுணியின் மேல்பகுதி தோல் திசுவை நீக்கி மீண்டும் தையல் போடுகின்றனர். ஓரிரு மாதங்களில் காயம் ஆறி கைரேகையில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்துமாம். இது ஒருவருடம் வரை மாறுபட்ட கைரேகையைக் காட்டுமாம்.
குவைத் குடியுரிமையேற்று அலுவலகத்தில் கைரேகையைக் கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்பதை அறிந்தே இதுபோன்ற அறுவைசிகிச்சைகளை செய்து நூதன மோசடியில் ஈடுபடுகின்றனராம்.
இந்த கைரேகை மாற்று அறுவை சிகிச்சையை செய்த பின்னர் புதிதாக புது முகவரியும் ஆதாருக்கு விண்ணபித்தும் பெறுகின்றனர். பின்னர் குவைத்துக்கு புதிதாக விசா பெற்று செல்கின்றனர் என்று விவரித்தார் ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத்.

கைதான நான்கு பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள்  420, 467, 468, 472, 475, 109 ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதவிர ஐபிசி .40, 42 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Tamilnadu Roundup 14.08.2025: தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது.. இன்று கூடும் அமைச்சரவை - தமிழகத்தில் பரபரப்பு
Tamilnadu Roundup 14.08.2025: தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது.. இன்று கூடும் அமைச்சரவை - தமிழகத்தில் பரபரப்பு
Mahindra XUV 3XO: ஆஃபரோ ஆஃபர்.. XUV 3XO காருக்கு தள்ளுபடியை அறிவித்த மஹிந்திரா.. எவ்ளோ தெரியுமா?
Mahindra XUV 3XO: ஆஃபரோ ஆஃபர்.. XUV 3XO காருக்கு தள்ளுபடியை அறிவித்த மஹிந்திரா.. எவ்ளோ தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை:  உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை: உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!
Embed widget