மேலும் அறிய

Crime: நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை.. சோகத்தில் தந்தையும் தற்கொலை.. பெரும் சோகம்..!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தந்தையும் தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவரது தந்தையும் தற்கொலை செய்துக் கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரை பறிக்கும் நீட்:

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய தேர்வு முகமை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு நடக்கும்போதெல்லாம் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும். அதேசமயம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போதெல்லாம் தோல்வியடைந்த கவலையில் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது தொடர்கதையாகவே உள்ளது. 

நீட் தேர்வுக்கு ஆதரவு ஒருபக்கம் இருக்கும் பட்சத்தில்,  தமிழ்நாட்டில் அதிகளவில் எதிர்ப்பும் உள்ளது. காரணம் இந்த  தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு கனவாக மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிரான நிலையிலேயே உள்ளது. நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம்  பொதுப்பட்டியலில் இருப்பதால் அந்த கோப்பு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர் தற்கொலை:

சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நீட் விலக்கு மசோதா பற்றி கேள்வியெழுப்பப்பட்டதற்கு, அந்த கோப்பில் நான் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி. தெரிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிகழ்வு நடைபெற்று ஒருநாள் கடந்த நிலையில், நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த செல்வசேகர் என்பவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன்(19), இரண்டு முறை நீட் தேர்வு எழுதி 200க்கும் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்துள்ளார். இதனால் மிகுந்த மன வருத்ததுடன் இருந்ததாக கூறப்படுகிறது. நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றும் பலனலளிக்காத நிலையில் மீண்டும் நீட் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வகுப்பிற்கு செல்லாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை தற்கொலை:

இந்த சம்பவம் தொடர்பாக  சிட்லபாக்கம் போலீசார் ஜெகதீஸ்வரன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் செல்வம், மகனும் இறந்து விட்டதால் துக்கம் தாங்காமல் ஜெகதீஸ்வரன் தந்தை செல்வம் தeற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Prajwal Revanna: பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
TN Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?
அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Thambi Ramaiah Speech | Bala on Samuthirakani :   ”1000 மாற்றுத்திறனாளி குழந்தைகள்! உடனே ஓடிவந்த சமுத்திரக்கனி” பாலா உருக்கம்Villupuram flying squad : ரூ.68,000-ஐ வாங்க 2 கிலோ நகை அணிந்து வந்த நபர்!அதிர்ந்த தேர்தல் அதிகாரிகள்Kadambur Raju  : ”சசிகலாவுக்கு எதுவும் தெரியாது! அரசியல்ல ஈடுபட்டது இல்ல” கடம்பூர் ராஜூ பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prajwal Revanna: பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
TN Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?
அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?
Fact Check: மம்தா பானர்ஜியின் உண்மையான பெயர் மும்தாஜ் மசாமா கட்டூன்? தீயாய் பரவும் செய்தி உண்மையா?
மம்தா பானர்ஜியின் உண்மையான பெயர் மும்தாஜ் மசாமா கட்டூன்? தீயாய் பரவும் செய்தி உண்மையா?
Cooku with Comali 5: செல்லம்மா அன்ஷிதா முதல் நாஞ்சில் விஜயன் வரை: குக்கு வித் கோமாளியில் இணைந்த 5 புது கோமாளிகள்!
Cooku with Comali 5: செல்லம்மா அன்ஷிதா முதல் நாஞ்சில் விஜயன் வரை: குக்கு வித் கோமாளியில் இணைந்த 5 புது கோமாளிகள்!
Artificial Sweetener: கவனமா இருங்க. Cup Cake-இல் செயற்கை இனிப்பூட்டிகளால் அபாயம்.. ஆய்வில் தகவல்
Artificial Sweetener: கவனமா இருங்க. Cup Cake-இல் செயற்கை இனிப்பூட்டிகளால் அபாயம்.. ஆய்வில் தகவல்
Gukesh Chess: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷூக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத் தொகை - நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷூக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத் தொகை - நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!
Embed widget