மேலும் அறிய

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!

பிரிதிலதாவின் தங்கை பூஜா சக்ரவர்த்தி 2 நாட்களாக தொடர்பு கொண்ட நிலையில் யாரும் எடுக்காததால் உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி என்ன நிலைமை என பார்த்து வர அனுப்பியுள்ளார். அப்போது அந்த கொலை நடந்தது என தெரிய வந்தது.

வங்கதேசத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கதேசத்தில் உள்ள ரங்க்பூர் மாவட்டப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆசிரியரான 65 வயதான கணபதி சக்ரவர்த்தி என்பவர் தனது மனைவி 50 வயதான பிரிதிலதா சக்ரவர்த்தி, அவர்களது மகள் 23 வயதான அகமி சக்ரவர்த்தி மற்றும் 12 வயது மகன் பிரியம் சக்ரவர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் குடும்பத்தினரின் மொபைல் போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. 

கடைசியாக பிரிதிலதாவின் தங்கை பூஜா சக்ரவர்த்தி 2 நாட்களாக தொடர்பு கொண்ட நிலையில் யாரும் எடுக்காததால் உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி என்ன நிலைமை என பார்த்து வர அனுப்பியுள்ளார். அப்படியாக வந்த உறவினர்கள் முன்வாசல் பூட்டப்பட்டிருந்தையும், வீட்டினுள் இருந்த விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டதையும் கண்டனர். ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு 4 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கணபதி குடும்பம் அந்த பகுதியில் 4 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் ஒரு புதிய வீட்டைக் கட்டியிருப்பதும், அவர்களுக்கு யாருடனும் முன்பகை இல்லை எனவும் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்படியிருக்கும்போது யார் இந்த 4 பேரையும் கொலை செய்தது என தெரியாமல் போலீசார் தவித்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்களின் சந்தேகப் பார்வை உறவினர்களான முக்தோ மற்றும் சித்தார்த்தா  மீது திரும்பியது. 

இருவரும் பக்கத்து வீடு வழியாக கணபதி வீட்டு மாடிக்கு சென்று அதிக போதை தரும் போதைப்பொருளான மெத்தம்பேட்டமைனை பயன்படுத்தியுள்ளனர். சத்தம் கேட்டு கணபதி மாடிக்கு சென்ற நிலையில் தாங்கள் மாட்டி விடுவோம் என நினைத்த முக்தோ மற்றும் சித்தார்த்தா இருவரும் தங்களிடம் இருந்த துண்டைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொலை செய்தனர். 

தொடர்ந்து சத்தம் கேட்டு மாடிக்கு செல்ல முயன்ற கணபதியின் மனைவி பிரிதிலதாவை படிக்கட்டிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். அதன்பின்னர் மகள் அகமி மற்றும் மகன் பிரியம் ஆகியோரும் தங்களை காட்டிக் கொடுத்து விட வாய்ப்புள்ளது என கொலை செய்து விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் குற்றம் செய்த பிறகு துளியும் பயமில்லாமல் அவர்கள் ஆறு முதல் ஏழு மணி நேரம் அந்த வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்தனர். அப்போது போதைப் பொருட்கள், உணவை உட்கொண்டனர். வீட்டில் இருந்த பேரீட்சை, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு சர்வ சாதாரணமாக இருந்துள்ளனர். 

தொடர்ந்து அந்த வீட்டில் குளித்த அவர்கள், நகைகளையும் திருடி உருக்கியுள்ளனர். இதனால் தங்க நகையில் அனுபவம் வாய்ந்த ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தபோது தான் முக்தோ மற்றும் சித்தார்த்தா இருவரும் சிக்கியுள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!
துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!
துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
கட்டணம் செலுத்துங்க! தனியா பேசலாம்! சமூக வலைதளங்களில் அழைப்பு: 12 பேர் மீது வழக்கு!
கட்டணம் செலுத்துங்க! தனியா பேசலாம்! சமூக வலைதளங்களில் அழைப்பு: 12 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget