மேலும் அறிய

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!

ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சீர்காழி, கரூர் ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை கோரி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சீர்காழி, கரூர் ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை கோரி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: ரஷ்யா நாட்டில் மாணவர் விசாவில் வேலைக்கு அழைத்துச் சென்று முறைகேடாகப் பணியில் அமர்த்தி, கைது நடவடிக்கைக்கு உள்ளாகி சொந்த ஊருக்குத் தப்பி வந்ததாகக் கூறி கேரளா மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியாவிடம் புகார் மனு அளித்துள்ளனர். சீர்காழியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகிரதன் ஆகிய இரண்டு போலி முகவர்கள் பல இளைஞர்களை ஏமாற்றி, ரஷ்ய ராணுவத்திலும் முறைகேடான வேலைகளிலும் சேர்த்து விட்டுள்ளதாகவும், இதனால் பலர் அந்நாட்டில் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

ரஷ்ய ராணுவத்தில் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கேரளா இளைஞரின் வாக்குமூலம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோழிப்பாறையைச் சேர்ந்த பிரவீன் ஜான்சன் (28) என்ற இளைஞர், கரூரைச் சேர்ந்த பகிரதன் என்பவரின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். பகிரதனின் வழிகாட்டுதலின்படி, சீர்காழியைச் சேர்ந்த முகவர் அருண்குமாரின் வங்கிக் கணக்கில் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் பணத்தைச் செலுத்தியுள்ளார். கடந்த மே மாதம் மாணவர் விசாவில் ரஷ்யா சென்ற பிரவீன் ஜான்சனை, வேலைக்கான விசா இல்லாமல் ஒரு நிறுவனத்தில் கூலி வேலைக்கு அனுப்பியுள்ளனர்.

விசா காலக்கெடு முடிந்ததால் ரஷ்ய போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் இந்தியத் தூதரகம் மூலம் சொந்தச் செலவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். தம்மைப் போல் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ரஷ்யா ராணுவத்தில் சேர்த்து விட்டதாகவும், அவர்கள் உக்ரைன் எல்லையில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகவும் அவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

உணவு பேக்கிங் வேலை என்று கூறி கார் கழுவும் வேலையில் தள்ளப்பட்ட சோகம்

இதேபோல் முகவர் அருண்குமாரால் ஏமாற்றப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த ரஞ்சித்குமார் (26) என்பவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். உணவு பேக்கிங் வேலை தருவதாகக் கூறி ரூ. 5 லட்சத்து 15 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் அவரை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு அவரை கார் கழுவும் வேலைக்கு அனுப்பி வைத்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரஷ்ய போலீசாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

காவல்துறையின் உடனடி நடவடிக்கை மற்றும் பணத்தை மீட்கக் கோரிக்கை

இளைஞர்களின் வெளிநாட்டு வேலைக்கனவைச் சாதகமாகப் பயன்படுத்தி வாழ்க்கையைச் சீரழிக்கும் முகவர்கள் அருண்குமார் மற்றும் பகிரதன் ஆகிய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், திமுக பிரமுகரான அருண்குமாரின் தந்தை சசிகுமார் நேரில் சென்று பணம் கேட்டால் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
பொதுமக்கள் கவனத்திற்கு..! இனி கழிவுகளைத் தரம் பிரிக்காவிட்டால் சேகரிக்கப்பட மாட்டாது - ஆணையர் எச்சரிக்கை!
பொதுமக்கள் கவனத்திற்கு..! இனி கழிவுகளைத் தரம் பிரிக்காவிட்டால் சேகரிக்கப்பட மாட்டாது - ஆணையர் எச்சரிக்கை!
மாதச் சம்பளம் ₹58,500 வரை! நாகப்பட்டினம் மாவட்ட சிறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
மாதச் சம்பளம் ₹58,500 வரை! நாகப்பட்டினம் மாவட்ட சிறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு மாநில ஹஜ் ஆய்வாளர் நியமனம் 2027: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு மாநில ஹஜ் ஆய்வாளர் நியமனம் 2027: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget