மேலும் அறிய

தலைக்கு வந்தது தொப்பியோடு போச்சு! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய போலீஸ்! கூடுவாஞ்சேரி என்கவுண்டரில் நடந்தது என்ன?

"சென்னை கூடுவாஞ்சேரி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி பகுதியில் இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் "

போலீசை போட்டு தள்ள பிளான்
 
சென்னை அடுத்த தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருகே சாலையில் இன்று இரவு அதிகாலை 3:30 மணி அளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்ட பொழுது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்றபோது அதில் இருந்த நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் , காரை போலீசாரை தாக்க முற்பட்டனர்.
 
கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட போலீசார்
 
அதில் ஒருவர் அருவாள் மூலம் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முற்பட்டபோது உதவியாளர் கீழே குனிந்ததால், அவரது தொப்பியில் வெட்டு பட்டுள்ளது. இதைப் பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டுள்ளனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடி உள்ளனர். மேற்படி துப்பாக்கியால் சுட்டதில் காயம்பட்ட இருவரை பற்றி காவல்துறையினர் விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் என்கிற சோட்டா வினோத் என்பதும் வினோத் ஓட்டேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவு குற்றவாளி என்பதும், அவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதில் 10 கொலை 15 கொலை முயற்சி மற்றும் 10 கூட்டுக் கொள்ளை ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 
 
என்கவுண்டர் செய்த போலீஸ்
 
மற்றொரு நபரான ரமேஷ் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் அவர் மீது 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரமேஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகள் மற்றும் 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரமேஷ் மற்றும் சோட்டா வினோத் ஆகிய இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்ற பொழுது வரும் வழியிலே, அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளனர். தப்பித்து ஓடிய மற்ற இரண்டு ரவுடிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுவாஞ்சேரி பகுதியில் காவலரை தாக்கிய இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் அதிக அளவு ரவுடிகள் மற்றும் குட்டி ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget