மேலும் அறிய

கழிவுநீர் குழாயை அடைத்த உறவுக்கார பெண்...மன உளைச்சலால் தீக்குளித்த வயதான தம்பதி..!

சசிகலாவுக்கும், ஜானகிராமனுக்கு சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. நல்ல உறவினர்களாக இருக்க வேண்டிய இவர்கள், சொத்து தகராறால் எதிராளிகள் போல் மாறிவிட்டனர்.

சென்னை அருகே உறவினர் பெண் ஒருவர், வீட்டின் கழிவுநீர் குழாயை அடைத்ததால், வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் சோழபுரம் சரஸ்வதி பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன். வயது 85. இவர் மனைவி மாரியம்மாள், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரின், வீட்டின் உறவினர் பெண்ணான சசிகலா என்பவர், கணவர் இறந்த நிலையில், தனது 10 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

சசிகலாவுக்கும், ஜானகிராமனுக்கு சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. நல்ல உறவினர்களாக இருக்க வேண்டிய இவர்கள், சொத்து தகராறால் எதிராளிகள்போல் மாறிவிட்டனர். இந்த சொத்து தகராறை மனதிலே வைத்துக்கொண்ட சசிகலா, சில தினங்களுக்கு  முன்பு, ஜானகிராமன் வீட்டுக்கு செல்லும் கழிவு நீர் குழாய் இணைப்பை அடைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கழிநீர் வெளியேற முடியாமல் ஜானகிராமன் வீட்டு வளாகத்தில் தேங்கியுள்ளது. கழிவுநீர் தேங்கியதால், துர்நாற்றம் வீசி கடும் அவதிக்குள்ளாகினர் ஜானகிராமன் குடும்பத்தினர். இதுதொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 


கழிவுநீர் குழாயை அடைத்த உறவுக்கார பெண்...மன உளைச்சலால் தீக்குளித்த வயதான தம்பதி..!

இந்த நிலையில், ஜானகிராமனும், அவரது மனைவியும் சசிகலாவின் வீட்டுக்கு பின்புறம் இருந்த பயன்படுத்தாத பாத்ரூமில் திடீரென்று தீக்குளித்தனர். அவர்களில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மகன், மருகள், இருவர் மீதும் பற்றி எரித்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ அவர்கள் உடல் முழுவதும் பரவியதால், உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஜானகிராமன் வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனது வீட்டு கழிவு நீர் இணைப்பை அடைக்க கூடாது எனக்கூறி, சசிகலா அடைத்துவிட்டதாகவும், இதனால், மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், தங்களின் சாவுக்கு சசிகலாதான் காரணம் என்றும், அவருக்கு  சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தை கொண்டு சசிகலாவை கைது செய்த போலீசார், அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். 

கழிவுநீர் குழாயை அடைத்ததால் ஏற்பட்ட தகராறில், வயதான தம்பதி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044-2464000 State suicide prevention helpline – 104 ,iCall Pychosocial helpline – 022-25521111 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
Embed widget