மேலும் அறிய

கழிவுநீர் குழாயை அடைத்த உறவுக்கார பெண்...மன உளைச்சலால் தீக்குளித்த வயதான தம்பதி..!

சசிகலாவுக்கும், ஜானகிராமனுக்கு சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. நல்ல உறவினர்களாக இருக்க வேண்டிய இவர்கள், சொத்து தகராறால் எதிராளிகள் போல் மாறிவிட்டனர்.

சென்னை அருகே உறவினர் பெண் ஒருவர், வீட்டின் கழிவுநீர் குழாயை அடைத்ததால், வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் சோழபுரம் சரஸ்வதி பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன். வயது 85. இவர் மனைவி மாரியம்மாள், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரின், வீட்டின் உறவினர் பெண்ணான சசிகலா என்பவர், கணவர் இறந்த நிலையில், தனது 10 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

சசிகலாவுக்கும், ஜானகிராமனுக்கு சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. நல்ல உறவினர்களாக இருக்க வேண்டிய இவர்கள், சொத்து தகராறால் எதிராளிகள்போல் மாறிவிட்டனர். இந்த சொத்து தகராறை மனதிலே வைத்துக்கொண்ட சசிகலா, சில தினங்களுக்கு  முன்பு, ஜானகிராமன் வீட்டுக்கு செல்லும் கழிவு நீர் குழாய் இணைப்பை அடைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கழிநீர் வெளியேற முடியாமல் ஜானகிராமன் வீட்டு வளாகத்தில் தேங்கியுள்ளது. கழிவுநீர் தேங்கியதால், துர்நாற்றம் வீசி கடும் அவதிக்குள்ளாகினர் ஜானகிராமன் குடும்பத்தினர். இதுதொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 


கழிவுநீர் குழாயை அடைத்த உறவுக்கார பெண்...மன உளைச்சலால் தீக்குளித்த வயதான தம்பதி..!

இந்த நிலையில், ஜானகிராமனும், அவரது மனைவியும் சசிகலாவின் வீட்டுக்கு பின்புறம் இருந்த பயன்படுத்தாத பாத்ரூமில் திடீரென்று தீக்குளித்தனர். அவர்களில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மகன், மருகள், இருவர் மீதும் பற்றி எரித்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ அவர்கள் உடல் முழுவதும் பரவியதால், உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஜானகிராமன் வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனது வீட்டு கழிவு நீர் இணைப்பை அடைக்க கூடாது எனக்கூறி, சசிகலா அடைத்துவிட்டதாகவும், இதனால், மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், தங்களின் சாவுக்கு சசிகலாதான் காரணம் என்றும், அவருக்கு  சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தை கொண்டு சசிகலாவை கைது செய்த போலீசார், அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். 

கழிவுநீர் குழாயை அடைத்ததால் ஏற்பட்ட தகராறில், வயதான தம்பதி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044-2464000 State suicide prevention helpline – 104 ,iCall Pychosocial helpline – 022-25521111 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
Embed widget