மேலும் அறிய

Aishwarya Rai Summoned: ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்: பனாமா பேப்பர் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்த விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தவர்களின் பட்டியல் பனாமா பேப்பரில் வெளியானது. இந்த பட்டியலில் பிரபல நடிகையும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் பெயரும் இடம்பெற்றிருந்தது. பனாமா ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு சமமன் அனுப்பப்பட்டது.  இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராயின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

 

முன்னதாக, கடந்த 2016 ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், செல்வந்தர் கள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பனாமாவில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை ஜெர்மனியை சேர்ந்த பத்திரிகை ஒன்று வெளியிட்டது. அதில்,  நடிகை ஜஸ்வர்யா ராய் உள்பட 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பிரிவு 37ன் கீழ் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மும்பையில் உள்ள ஐஸ்வர்யா ராயின் வீட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. டிசம்பர் 20 ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை. அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முடிவெடுக்கும்” எனத் தெரிவித்தார். 

 

இதனிடையே ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி “பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில், 2021 அக்டோபர் நிலவரப்படி, 930 இந்திய நிறுவனங்களின் 20,353 கோடி ரூபாய் கணக்கில் வராத வரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
முறைகேடில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வருமான வரி சட்டம் மற்றும் கறுப்பு பண சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேரடி வரிச் சட்டத்தின் கீழ் சோதனைகள் மற்றும் பறிமுதல், ஆய்வுகள், விசாரணைகள், வருமானத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் மறுமதிப்பீடு செய்தல், வட்டியுடன் வரி விதித்தல், அபராதம் விதித்தல், கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரும் புகார்களை பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும். இதில், 153.88 கோடி ரூபாய் வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளன. பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் ஊழலில் 52 வழக்குகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 130 வழக்குகளில் கறுப்பு பணம் மற்றும் வரி விதிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு - மயிலாடுதுறை பேருந்து நிலைய மாற்றமே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு..!
கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு - மயிலாடுதுறை பேருந்து நிலைய மாற்றமே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு..!
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
TASMAC Liquor Bottles : டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Embed widget