மேலும் அறிய

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நடத்திய குடும்பம்! ரூ.20 கோடி வசூல்… கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது!

ஜோதி சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு குடும்பத்தோடு தலைமறைவாக, இவர்களிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் மற்றும் முகவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி பல கோடிகளை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கியையும் 6 தோட்டக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சீட்டு நிறுவன மோசடி

சீட்டு விஷயத்தில் மோசடி செய்வது குறித்து பல காலங்களுக்கு முன்னரே வெளியில் தெரியவந்தது. மக்கள் விழிப்புணர்வு அடைந்திருந்து அதில் ஏமாற்றுபவர்கள் குறைந்திருந்தாலும், கண்கவர் ஆஃபர்களை கொடுத்து ஆசைகளை தூண்டி இன்னமும் மக்களை ஏமாற்றும் வேலை அவ்வபோது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிதான் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இந்த மோசடியில் சிக்கி உள்ளனர். இவர்கள் மொத்தம் 20 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்லை அடுத்த மாளந்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 33 வயதான ஜோதி என்பவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு ஜோதி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளனர். இருவரும் இணைந்து இந்த நிறுவனத்தின் மூலம் தீபாவளி சீட்டு என்ற பெயரில் பெரும் மோசடியை நடத்தி இருக்கிறார்கள். 

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நடத்திய குடும்பம்! ரூ.20 கோடி வசூல்… கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது!

கண்ணைக் கவரும் ஆஃபர்

மாதம் ரூ.1,000 செலுத்தினால் 4 கிராம் தங்கத்துடன் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் தருவதாகவும், மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் ஒரு திட்டமும், மாதம் ரூ.500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் 20 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள், மளிகை பொருட்கள் வழங்குவதாக ஒரு திட்டமும், அறிவித்து தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். இந்த தீபாவளி சீட்டின் மீது ஈர்க்கப்பட்டு பலர் சேர்ந்துள்ளனர். தாமரைப்பாக்கம், மாளந்தூர், வெங்கல், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்: Chennai Snow: ஊட்டியாக மாறிய சென்னை..! திடீரென வீசும் கடும் குளிருக்கு காரணம் என்ன..?

ரூ.20 கோடி வசூல்

இதனிடையே இந்த சீட்டு நிறுவனத்தில் இருந்து சத்தியமூர்த்தி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால் ஜோதியின் மனைவி 25 வயது சரண்யா மற்றும் 65 வயது தந்தை மதுரை மற்றும் 30 வயதாகும் சகோதரர் பிரபு என்கிற பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் தீபாவளி சீட்டு பணத்தை தொடர்ந்து வசூலித்து வந்துள்ளனர். மேலும் நிறுவனம் வளர வளர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கிளை நிறுவனங்களை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அங்கெல்லாம் பல முகவர்களை நியமித்து சுமார் ரூ.20 கோடிக்கும் மேல் பணம் வசூலித்ததாக தெரிகிறது.

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நடத்திய குடும்பம்! ரூ.20 கோடி வசூல்… கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது!

குடும்பத்தோடு தலைமறைவு

தீபாவளி நெருங்க நெருங்க பணம் செலுத்தியவர்கள் உரிய பொருட்களை கேட்டு தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் சுதாரித்த ஜோதி, சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு குடும்பத்தாருடன் தலைமறைவாகிவிட்டார். இதனால் இவர்களிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் மற்றும் முகவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி புகார் மனு கொடுத்துள்ளனர். அதன்படி, வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து அதற்காக இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் செங்குன்றம் அருகே ஜோதி பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற தனிப்படை காவல்துறை ஜோதி மற்றும் அவரது தந்தை மதுரை, மனைவி சரண்யா மற்றும் தம்பி பிரபு ஆகியோரை கைது செய்தனர். கைது செய்தபோது அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் அதனுள் 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் அந்த துப்பாக்கி உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி என்று தெரியவந்தது. கைதான 4 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

CM Stalin: பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
Embed widget