மேலும் அறிய

திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடந்த இரட்டைக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). நிதிநிறுவன அதிபரான இவரும், அவரது தாய் சவுந்தரமும் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை குறித்து, எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்வராஜின் மனைவி சுபஹாசினி (29), தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரையும், மாமியாரையும் தீர்த்து கட்டியது தெரியவந்தது. 


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

இது தொடர்பாக சுபஹாசினி, அவரது கள்ளக்காதலனும், உறவினருமான ஒத்தப்பட்டியை சேர்ந்த பால்வியாபாரி கோபிகிருஷ்ணன் (29), அவரது கூட்டாளியான செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது இந்த கொலையில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கூலிக்காக அவர்கள் கொலைகாரர்களாக மாறி இருக்கின்றனர்.


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

சுபஹாசினிக்கு, கோபிகிருஷ்ணன் சகோதர உறவுமுறை ஆவார். இவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த செல்வராஜ் 2 பேரையும் கண்டித்தார். இதனால் செல்வராஜை தீர்த்துக்கட்ட கோபிகிருஷ்ணன் முடிவு செய்தார். இது தொடர்பாக சுபஹாசினியுடன் அவர் ஆலோசித்தார். கோபிகிருஷ்ணன் தனது நண்பர் ஆனந்துடன் கொலை திட்டம் பற்றி பேசினார். அவர், தனக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு ரூ.1½ லட்சம் கொடுத்தால் செல்வராஜை தீர்த்து கட்டி விடுவார்கள் என்றும் கூறினார்.

இதனையடுத்து அந்த பள்ளி மாணவர்கள் மூலம் செல்வராஜை கொலை செய்ய முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கோபிகிருஷ்ணனிடம் இருந்து ஆனந்த் பெற்று கொண்டார்.  பணத்தை பெற்ற ஆனந்த், சம்பவத்தன்று இரவு கோபிகிருஷ்ணனின் காரில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருடன் அங்கு வந்தார். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு 4 பேரும் நடந்தே செல்வராஜின் தோட்டத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த செல்வராஜ், சவுந்தரம் ஆகியோரை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

இதனையடுத்து கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் பிளஸ்-1 படிக்கிற 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிக்கன் கறி தகராறு ; கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி !! அரிவாளால் வெட்டிய பயங்கரம்
சிக்கன் கறி தகராறு ; கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி !! அரிவாளால் வெட்டிய பயங்கரம்
" நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம் " மகனுக்கு வந்த மெசேஜ் !! தாய் அரிவாளால் வெட்டிக் கொலை
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
TNCC President : ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செல்வப்பெருந்தகை’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
‘செல்வப்பெருந்தகை ராஜினாமா?’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..?
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
Tasmac shop closed : 2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
Embed widget