மேலும் அறிய

திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடந்த இரட்டைக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). நிதிநிறுவன அதிபரான இவரும், அவரது தாய் சவுந்தரமும் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை குறித்து, எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்வராஜின் மனைவி சுபஹாசினி (29), தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரையும், மாமியாரையும் தீர்த்து கட்டியது தெரியவந்தது. 


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

இது தொடர்பாக சுபஹாசினி, அவரது கள்ளக்காதலனும், உறவினருமான ஒத்தப்பட்டியை சேர்ந்த பால்வியாபாரி கோபிகிருஷ்ணன் (29), அவரது கூட்டாளியான செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது இந்த கொலையில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கூலிக்காக அவர்கள் கொலைகாரர்களாக மாறி இருக்கின்றனர்.


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

சுபஹாசினிக்கு, கோபிகிருஷ்ணன் சகோதர உறவுமுறை ஆவார். இவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த செல்வராஜ் 2 பேரையும் கண்டித்தார். இதனால் செல்வராஜை தீர்த்துக்கட்ட கோபிகிருஷ்ணன் முடிவு செய்தார். இது தொடர்பாக சுபஹாசினியுடன் அவர் ஆலோசித்தார். கோபிகிருஷ்ணன் தனது நண்பர் ஆனந்துடன் கொலை திட்டம் பற்றி பேசினார். அவர், தனக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு ரூ.1½ லட்சம் கொடுத்தால் செல்வராஜை தீர்த்து கட்டி விடுவார்கள் என்றும் கூறினார்.

இதனையடுத்து அந்த பள்ளி மாணவர்கள் மூலம் செல்வராஜை கொலை செய்ய முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கோபிகிருஷ்ணனிடம் இருந்து ஆனந்த் பெற்று கொண்டார்.  பணத்தை பெற்ற ஆனந்த், சம்பவத்தன்று இரவு கோபிகிருஷ்ணனின் காரில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருடன் அங்கு வந்தார். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு 4 பேரும் நடந்தே செல்வராஜின் தோட்டத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த செல்வராஜ், சவுந்தரம் ஆகியோரை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

இதனையடுத்து கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் பிளஸ்-1 படிக்கிற 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Embed widget