மேலும் அறிய

திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடந்த இரட்டைக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). நிதிநிறுவன அதிபரான இவரும், அவரது தாய் சவுந்தரமும் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை குறித்து, எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்வராஜின் மனைவி சுபஹாசினி (29), தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரையும், மாமியாரையும் தீர்த்து கட்டியது தெரியவந்தது. 


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

இது தொடர்பாக சுபஹாசினி, அவரது கள்ளக்காதலனும், உறவினருமான ஒத்தப்பட்டியை சேர்ந்த பால்வியாபாரி கோபிகிருஷ்ணன் (29), அவரது கூட்டாளியான செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது இந்த கொலையில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கூலிக்காக அவர்கள் கொலைகாரர்களாக மாறி இருக்கின்றனர்.


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

சுபஹாசினிக்கு, கோபிகிருஷ்ணன் சகோதர உறவுமுறை ஆவார். இவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த செல்வராஜ் 2 பேரையும் கண்டித்தார். இதனால் செல்வராஜை தீர்த்துக்கட்ட கோபிகிருஷ்ணன் முடிவு செய்தார். இது தொடர்பாக சுபஹாசினியுடன் அவர் ஆலோசித்தார். கோபிகிருஷ்ணன் தனது நண்பர் ஆனந்துடன் கொலை திட்டம் பற்றி பேசினார். அவர், தனக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு ரூ.1½ லட்சம் கொடுத்தால் செல்வராஜை தீர்த்து கட்டி விடுவார்கள் என்றும் கூறினார்.

இதனையடுத்து அந்த பள்ளி மாணவர்கள் மூலம் செல்வராஜை கொலை செய்ய முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கோபிகிருஷ்ணனிடம் இருந்து ஆனந்த் பெற்று கொண்டார்.  பணத்தை பெற்ற ஆனந்த், சம்பவத்தன்று இரவு கோபிகிருஷ்ணனின் காரில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருடன் அங்கு வந்தார். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு 4 பேரும் நடந்தே செல்வராஜின் தோட்டத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த செல்வராஜ், சவுந்தரம் ஆகியோரை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


திண்டுக்கல் : வேடசந்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பள்ளி மாணவர்கள் கைது

இதனையடுத்து கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் பிளஸ்-1 படிக்கிற 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget