மேலும் அறிய

தருமபுரி: மொரப்பூர் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் தங்கம், வெள்ளி, பணம் கொள்ளை

’’ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள்,  மூன்று-பவுன் தங்க நகை மற்றும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று-பட்டு புடவைகள் திருட்டு'’

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர்  கிருஷ்ணகிரியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இதேப்போல்  சென்னையன், மதுபாலாஜி,  ஆகியோர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையன், வெங்கடேசன், மதுபாலாஜி ஆகிய, மூன்று பேரின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட கிராம மக்கள், கம்பைநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பைநல்லூர் காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.
 

தருமபுரி: மொரப்பூர் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் தங்கம், வெள்ளி, பணம் கொள்ளை
 
இதில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளில் நுழைந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று வீடுகளில் திருடு போனதால், தருமபுரியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். இதில் வெங்கடேசன் தனது வீட்டினுள் சென்று பார்த்தபோது, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள்,  மூன்று-பவுன் தங்க நகை மற்றும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று-பட்டு புடவைகள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் சென்னையன் மற்றும் மதுபாலாஜி  சென்னையிலிருந்து வந்த பின்பே, அவர்களது வீட்டில் திருடு போன பொருட்கள் விவரம் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து ஒரே கிராமத்தில், அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்
 

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு வாகன ஒட்டிகள் அவதி. 
 
தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால் கார்த்திகை மாதம் தொடங்கி ஒரு வாரமாகியும் பனி வரவில்லை. வடகிழக்கு பருவமழையால் தொடர் மழை பெய்து வந்தது. கடந்த வாரம் வரை தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை.
 
தருமபுரி: மொரப்பூர் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் தங்கம், வெள்ளி, பணம் கொள்ளை
 
தொடர்ந்து மழை நின்றதால் பனி பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், நெருப்பாண்டகுப்பம், அக்ராகரம், எட்டிப்ட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும்  பனிபொழிவுகள் ஏற்பட்டது. அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை.  இன்று காலை  சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக  வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget