மேலும் அறிய

Crime: பள்ளி வகுப்பறையில் சிறுநீர் கழித்து இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. அதிர்ச்சியில் மக்கள்

டெல்லியிலுள்ள பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 2 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளி ஒன்றில் இரண்டு சிறுமிகளுக்கு எதிராக ஒரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியின் பஜன்பூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் அரசு பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் காவல்துறைக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில், “பஜன்பூர் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளிக்குள் வந்து அந்த இரண்டு சிறுமிகளின் ஆடைகளை கழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் அவர் பள்ளியின் வகுப்பறையில் சிறுநீர் கழித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கிழக்கு மாநகராட்சி ஆணையர் எங்களிடம் நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது பள்ளிக்குள் அடையாளம் தெரியாத நபர் எப்படி நுழைந்தார்? அங்கு சிசிடிவி கேமராக்கள் இடம்பெறவில்லையா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.அத்துடன் இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க:ஆட்டோவில் சென்ற பெண்ணை வெளியே இழுத்து பாலியல் குற்றம்.. வீடியோ வெளியிட்டு கொடூரம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஏமாற்றுவதில் PhD படித்த கில்லாடி !! கணவனை பிரித்து.. நகையை சுருட்டி 'சிங்கப்பூர்' நாடகம்
ஏமாற்றுவதில் PhD படித்த கில்லாடி !! கணவனை பிரித்து.. நகையை சுருட்டி 'சிங்கப்பூர்' நாடகம்
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Temples Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
Embed widget