மேலும் அறிய

Crime: 'வேலைக்கு போவியா?' மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் - சிக்கியது எப்படி?

டெல்லியில் மனைவி வேலைக்கு போவது பிடிக்காத கணவன், அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான குடும்ப தகராறும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மற்றொரு கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கழுத்தை நெரித்து கொலை:

தெற்கு டெல்லியில் அமைந்துள்ளது அம்பேத்கர் நகர். இந்த நகரில் வசித்து வருபவர் வேத் பிரகாஷ். அவருக்கு வயது 52. இவரது மனைவி சுஷிலா. அவருக்கு வயது 50. இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், நேற்று காலையில் ஆகாஷூம், பிரகாஷூம் சுசிலாவை மருத்துவமனைக்கு பேச்சு, மூச்சற்ற நிலையில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஷிலா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதால் மருத்துவமனை ஊழியர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆகாஷ் மற்றும் பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் ஆகாஷ், “நாங்கள் அம்பேத்கர் நகரில் உள்ள மடங்கிரில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். என்னுடைய பெற்றோர்கள் தரைத்தளத்தில் வசித்து வருகின்றனர். நாங்கள் முதல் தளத்தில் வசிக்கிறோம். இன்று காலை 6 மணியளவில் எனது தந்தை எனக்கு போன் செய்தார். நான் சென்று பார்த்தபோது எனது அம்மாவை அவர் பாத்ரூமில் இருந்து இழுத்து வந்தார். நான் கேட்டதற்கு அவர் மயக்க நிலையில் இருப்பதாக கூறினார். நான் மீண்டும் மீண்டும் கேட்டபோது அவர் சண்டையில் எனது அம்மாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறினார்.” இவ்வாறு ஆகாஷ் போலீசிடம் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

இதன் பின்னரே, ஆகாஷ் தனது அம்மாவை காப்பாற்றிவிட மாட்டோமா? என்று மருத்துவமனைக்கு அவரது உடலை கொண்டு வந்துள்ளார். உடன் பிரகாஷூம் வந்துள்ளார். ஆனால், சுசிலா ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

போலீசார் பிரகாஷூடம் நடத்திய விசாரணையில் அவரும் சுசிலாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். சுசிலா வேலை காரணமாக வெளியில் செல்வது தொடர்பாக பிரகாஷூற்கும், சுசிலாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றி பிரகாஷ் சுசிலாவின் துப்பட்டாவாலே சுசிலாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

மனைவி வேலை காரணமாக வெளியில் செல்வது பிடிக்காத கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: IIT Student Death: ஐஐடியில் என்னதான் நடக்குது? தொடரும் மர்மம்.. சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவர்!

மேலும் படிக்க: Dutee Chand: 'எல்லாம் வீணாகிவிட்டது' : உச்சநீதிமன்ற தன்பாலின திருமண தீர்ப்பால் டூட்டி சந்த் அப்செட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget