மேலும் அறிய

அபராதம் விதித்த போலீசாருக்கு மிரட்டல்; இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகி மீது கொலை மிரட்டல் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு விதிகள் அமலில் இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு ஊரடங்கு மூன்று வகைகளாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக போலீசாரும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.




அபராதம் விதித்த போலீசாருக்கு மிரட்டல்; இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் இந்து முன்னணி கட்சியில் தற்போது நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஊரடங்கு விதிகள் அமலில் இருப்பதால் அவரை போலீசார் நிறுத்தி, விசாரித்துள்ளனர். மேலும், தேவையின்றி வெளியில் சுற்றிய காரணத்தினால் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதித்துள்ளனர். 

இதனால், ஆத்திரம் அடைந்த செல்லப்பாண்டியன் காவல் ஆய்வாளர் மற்றும் அங்கிருந்த போலீசாரிடம் சென்று தான் யார் என்று தெரியுமா? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், எங்கள் ஏரியாவிற்குள் நான் வரக்கூடாதா? பார்த்துக்கொள்ளலாமா? எனக்கே அபராதாமா? என கடுமையாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, செல்லப்பாண்டியனிடம் அபராதம் விதித்த தலைமை காவலரிடம் சென்று, தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.


அபராதம் விதித்த போலீசாருக்கு மிரட்டல்; இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதையடுத்து, செல்லப்பாண்டியன் மீது சிறப்பு உதவி ஆய்வாளர் வில்லியம் ஜேம்ஸ் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு விதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் இதுபோன்ற நபர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்ணுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை, சொகுசு காரில் வந்த அந்த பெண்ணின் தாயார் தான் வழக்கறிஞர் என்றும், உங்கள் அனைவரையும் வேலையை விட்டுத் தூக்கிவிடுவேன் என்றும் பேசியதுடன் மிகவும் தகாத வார்த்தைகளால் போலீசாரை திட்டினார்.

இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அந்த பெண் வழக்கறிஞர் தனக்கும், தனது மகளுக்கும் கோரிய முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget