மேலும் அறிய

சூனியம் வைத்ததால் அப்பா மரணம்.. கோபத்தில் அம்மாவை கொலை செய்த மகள்

கர்நாடகாவின் தும்குரு மாவட்டத்தில் சுசித்ரா என்ற பெண் தனது தந்தை மரணத்திற்கு தாய் தான் காரணம் என நம்பி அவரை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தனது தந்தையின் மரணத்திற்கு தாய் தான் காரணம் என ஜோதிடர் சொன்னதால் தாயை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருப்பவர்கள், ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை இருப்பவர்கள் அதனை கணித்து சொல்பவர்களால் கூறப்படும் விஷயங்களை செய்ய தயங்கவே மாட்டார்கள். தான தர்மம் தொடங்கி நரபலி கொடுப்பது வரை நடந்து வருகிறது. இந்த நிலையில் பில்லி, சூனியம் போன்ற சடங்குகள் மீது ஏராளமானோருக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கையும், பயமும் உள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள கர்நாடகாவின் தும்குரு மாவட்டத்தில் சுசித்ரா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திடீரென உயிரிழந்தார். தந்தை இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சுசித்ரா மிகப்பெரிய அளவில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் ஜோதிடர் ஒருவரை அணுகி தன்னுடைய தந்தை மரணித்தது பற்றி கேட்டறிந்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர், உங்கள் தாயார், சூனியம் வைத்ததால், அது நேரடியாக தந்தையின் மரணத்திற்கு வழி வகுத்தது எனவும் தெரிவித்துள்ளார்.  

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த சுசித்ரா, ஜோதிடர் சொன்னதை உண்மை என நம்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது தாயாரான புஷ்பவதி வீட்டுக்கு நேரடியாக சென்ற அவர், அதுபற்றி கேட்க நினைத்துள்ளார். ஆனால் சுசித்ரா சென்ற நேரத்தில் அவரின் தாய் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு தலையணையை எடுத்து புஷ்பவதி முகத்தில் வைத்து அமுக்கி மூச்சுத்திணறடித்து அவரை சுசித்ரா கொலை செய்தார். 

இதனைத் தொடர்ந்து எதுவும் நடக்காதது போல தனது தாயார் இயற்கையான முறையில் மரணமடைந்து விட்டதாக குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார். உடலை விரைவாக அகற்றினால் தான் தப்பித்து விடுவோம் என திட்டமிட்ட சுசித்ரா இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்ய தொடங்கினார். அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் புஷ்பவதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது உள்ளூர் மக்கள் சிலர் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளை எல்லாம் கவனித்தனர். 

உடனடியாக கியட்சந்திரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கு முன்பாக வீட்டுக்கு விரைந்த போலீசார் சுசித்ரா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் தீவிர விசார்ணை நடத்தினர். இதில் முதலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறிய சுசித்ரா ஒரு கட்டத்தில் தனது தந்தை மரணத்திற்கு காரணமான தாயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சுசித்ராவுக்கு ஜோதிடம் சொன்ன நபரை போலீசார் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் சுசித்ராவின் கணவருக்கும் பங்கு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Embed widget