அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
ஆயுஷி ஷர்மாவின் தாயாரான 45 வயதாகும் நீரஜ் ஷர்மா நீதிமன்றத்தில் கீழ்நிலை எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் ஜூலை 3ஆம் தேதி கொல்லப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்பச் சொத்து மற்றும் அரசு வேலை மீதான ஆசையால் பெற்ற தாயை கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் நகரத்தில் நடைபெற்றுள்ளது. ஆயுஷி ஷர்மா என்ற பெண் தனது மாமா மற்றும் ஒன்றுவிட்ட சகோதரருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக ரூ.7 லட்சம் ரூபாய்க்கு கூலிப்படையினரை நியமித்து அந்தக் கொலையை ஒரு சாலை விபத்தாகக் காட்டுவதற்காகத் தனது தாயை ஸ்கார்பியோ எஸ்யூவி கார் மூலம் மோதச் செய்ததாகவும் விசாரணையில் உண்மை வெளிப்பட்டுள்ளது.
ஆயுஷி ஷர்மாவின் தாயாரான 45 வயதாகும் நீரஜ் ஷர்மா நீதிமன்றத்தில் கீழ்நிலை எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் ஜூலை 3ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆயுஷி ஷர்மா உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளி தலைமறைவாக உள்ளார். குற்றம் நடந்த நாளில் மணிக்கு நீரஜ் தனது மகனை பயிற்சி மையம் ஒன்றில் விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சுமார் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நீரஜ் ஷர்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் மீது மோதிய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நிகழ்ந்தது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை கண்டறிந்தனர். இது ஒரு விபத்து இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினர். இதன் விசாரணையில் இந்த சம்பவம் குடும்ப உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் நீரஜின் மகளே இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. நீரஜின் கணவர் கடந்த வரிடம் இறந்த நிலையில் கருணை அடிப்படையில் அவருக்கு அரசு வேலை கிடைத்தது. ஆனால் தந்தையின் மரணத்திற்கு வாரிசு அடிப்படையில் அந்த வேலையை ஆயுஷி விரும்பியுள்ளார். ஆனால் அம்மா குறுக்கே வந்து தடுத்ததால் தொடர்ந்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Also Read: 3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
மேலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தாய்க்கும் மகளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தான் தன் தாய் நீரஜை கொலை செய்ய ஆயுஷி முடிவு செய்தார். இதற்காக தன் மாமா மோகன் ஸ்வரூப், உறவினர் பல்ராம் ரவி ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டினார். கிட்டதட்ட ஒரு மாதமாக நீரஜின் நடவடிக்கைகளை கவனித்து இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர். மேலும் முன்பே சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக, தனது மகள், மாமியார் வீட்டார் மற்றும் உறவினர் ஆகியோரால் தான் துன்புறுத்தப்படுவதாக நீரஜ் போலீசில் புகார் தெரிவித்திருந்ததும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















