மேலும் அறிய

கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைத்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே பெரியக்குப்பத்தில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் சிலர் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22 மற்றும் 23-ந் தேதிகளில், சிலர் ஆலைக்குள் நுழைந்து, 2 குடோன்களுக்கு தீ வைத்து விட்டு சென்றனர். இதில் ரூ.1 கோடிக்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

விசாரணையில், புதுச்சத்திரம் அம்மன் கோவில் தெரு கம்பளிமேடு பகுதியை சேர்ந்த ராமதாஸ் மனைவி கவிதா (வயது 27), ராஜா மனைவி ஜெயஸ்ரீ (38), குறிஞ்சிப்பாடி அன்னதானம் பேட்டையை சேர்ந்த கந்தவேல் மனைவி சாவித்திரி (25), அகரம் காலனியை சேர்ந்த பிரியா (39), புதுச்சத்திரம் கோபாலபுரத்தை சேர்ந்த சித்ரா (40), ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த மலர் (35), கிருஷ்ணமூர்த்தி (57), தனுஷ் (26), பி.முட்லூர் காந்தி நகரை சேர்ந்த மகாலிங்கம் (40), கடலூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த குருசாமி (36), குள்ளஞ்சாவடி தெற்கு தெருவை சேர்ந்த சாரங்கம்(40), புதுச்சத்திரம் கம்பளி மேடு பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(26),


கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

குள்ளஞ்சாவடி தெற்குதெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (44), அன்னதானம் பேட்டை பகுதியை சேர்ந்த கந்தவேல் (37), குள்ளஞ்சாவடி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42), புதுச்சத்திரம் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பக்கிரி (60), புதுச்சத்திரம் குறவன்மேடு பகுதியை சேர்ந்த காத்தான் (67), புதுச்சத்திரம் பூச்சி மேடு பகுதியை சேர்ந்த ராஜாராம் (60), செல்வராசு (65), பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தை சேர்ந்த சந்திரன் (36), புதுச்சத்திரம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த கண்ணியப்பன் (65), காயில்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த சேகர் (58) ஆகிய 22 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிதம்பரம் நகர காவல்  நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget