மேலும் அறிய

Crime: தன்பாலின உறவுக்கு மறுத்த இளைஞர்! துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் - நடந்தது என்ன?

தஞ்சாவூரில் தன்பாலின உறவுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்பாலின உறவுக்கு  மறுத்த இளைஞர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (27). இவர் சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் தீபாவளி  பண்டிகைக்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருக்கிறார்.  இதனை அடுத்து 13ஆம் தேதி சிதம்பரத்தில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்புவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். 

இதற்கிடையில், அசோக்ராஜன் ஊருக்கு வரும்போது சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி (47) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும், அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கேசவமூர்த்தியிடம் அழுதிருக்கிறார்.  இதனால், கேசரமூர்த்தி, தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்தினார். அப்போது, இருவரும் தன்பாலினச் சேர்க்கை உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, கடந்த 13ஆம் தேதி வீட்டிற்கு வந்த அசோக்ராஜனை, கேசவமூர்த்தி அழைத்திருக்கிறார். ஆனால், அசோக்ராஜன் வர மறுத்தால், அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்திருக்கிறார் கேசவமூர்த்தி. அந்த மருந்தை சாப்பிட்ட அசோக்ராஜனுக்கு, பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிரிழந்தார். 

துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம்

இதனை அடுத்து, கேசவமூர்த்தி, அசோகராஜனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்திருக்கிறார். இதற்கிடையில், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த தனது பேரன் சென்னை சென்றாரா? என்பதற்காக அவரது பாட்டி அசோக்ராஜனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  ஆனால், அசோக்ராஜனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது பாட்டி, சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அசோக்ராஜன் சோழபுரம் சென்றது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், சேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்ராஜனும், கேசவமூர்த்தியும் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், கேசவமூர்த்தி அசோக்ராஜனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கேசவமூர்த்தி வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகி இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் அசோக் ராஜனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க

Crime: உறவை முறித்துக் கொண்ட ஆத்திரம்...இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொன்ற காதலன் - ஷாக்!

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
சீர்காழி புறவழிச்சாலையில் போகும் போது உஷார்! ஹெல்மெட் கொள்ளையர்கள் வெறிச்செயல்!
சீர்காழி புறவழிச்சாலையில் போகும் போது உஷார்! ஹெல்மெட் கொள்ளையர்கள் வெறிச்செயல்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget