மேலும் அறிய

Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

திருவண்ணாமலையில் சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் ஊராட்சி அடுத்த சர்வேசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வயது ( 41), இவர் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகில் உள்ள அம்மணி அம்மன் சித்தர் பீட நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் நேற்று வேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ரமேஷுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த ரமேஷ் மற்றும் அவர் குடும்பத்தினருடன் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தார். பின்னர் ரமேஷ் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது படுக்க அரையில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு அரையில் இருந்த பீரோக்களின் கதவுகளும் உடைக்கப்பட்ட நிலையில் பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

 


Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கோமளவள்ளி மற்றும் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். வீட்டினுள் ஜன்னல் உடைத்து நுழைந்தனர். பின்னர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இன்ஸ்டா மூலம் காதல்...பெற்றோர் எதிர்ப்பு... ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

மேலும் வீட்டில் இருந்த 45 பவுன் நகை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரின் வட்டாரத்தில் பேசுகையில், ரமேஷ் குடும்ப உறவினரின் திருமண நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற உள்ளது.

 


Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

 

அதற்காக வங்கியில் வைக்கப்பட்ட நகைகளை நேற்று ‌முன்தினம் மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். அதன் பிறகு தான் உறவினரின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போதுதான் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என தெரிவித்தனர். திருவண்ணாமலை நகர் பகுதி வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. காவல்துறையினர் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என்றும், இதுவரையில் காவல்துறையினர் கொள்ளையர்களை கைது செய்யாமல் உள்ளார்கள் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.