Crime: மனைவியின் நண்பரை 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர் - சந்தேகத்தால் நிகழ்ந்த கொடூரம்
மனைவி மீதான சந்தேகத்தால் அவரது ஆண் நண்பரை 15 துண்டாக கணவர் வெட்டிக் கெலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மனைவி மீதான சந்தேகத்தால் அவரது ஆண் நண்பரை 15 துண்டாக கணவர் வெட்டிக் கெலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரின் காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை 35 துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற பல மாநிலங்களில் அரகேறி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு கொடூர கொலை நடந்துள்ளது.
மனைவி மீது சந்தேகம்
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி (40). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் அக்ஷய் குமார் (25). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அக்ஷய் குமார் வேலைக்காக உ.பி.யில் வசித்து வந்துள்ளார். இவர் மீலால் பிரஜாபதியின் மனைவியுடம் நட்பாக பழகி வந்துள்ளார். மனைவி அக்ஷய் குமாருடன் பழகி வருவது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கூறியும் மனைவியின் நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மீலால், அவரது மனைவியின் நண்பரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
15 துண்டுகளாக வெட்டிய கொடூரம்





















