மேலும் அறிய

Crime: நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு.. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறார் கைது..!

செங்கம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பெருமுட்டம் பகுதியில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் ‌உழியர்கள் தினந்தோறும் கடையை திறந்து வியாபாரம் செய்து விட்டு இரவு நேரத்தில் வேலை முடிந்த பிறகு கடையை ‌பூட்டி செல்வார்கள். இந்நிலையில் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் முடிந்த ‌பிறகு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை வழக்கம் போல பூட்டி விட்டு சென்றனர்.இதனை அங்கு இருந்து நோட்டமிட்ட மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த 3 சிறார்கள் அங்கு இருந்து ஆட்கள் சென்ற உடன் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை கொள்ளையடிப்பதற்காக கடப்பாரை உள்பட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்தனர். அப்போது நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தூரத்தில் வருவதை பார்த்ததும் டாஸ்மாக் கடைக்குள் 3 நபர்களும் பதுங்கிக்கொண்டனர்.

 


Crime: நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு.. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறார் கைது..!

 

அதனைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல்துறையினர் ‌டாஸ்மாக் கடை ‌அருகே சென்றுள்ளனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட காவல்துறையினர் டாஸ்மாக் கடையின் உள்ளே சென்றனர். அப்போது கடையில் இருந்த ஒரு சிறுவன் வெளியே வேகமாக ஓடிவந்துள்ளார். 17 வயது சிறுவனை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுவனிடம் விசாரணையில் அவனுடன் 18 வயதுடைய மேலும் 2 நபர்கள் சேர்ந்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட சிறுவனை காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் கொண்டு சென்று விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் அவனுடன் ஈடுபட்ட ஒரு சிறுவன் அங்கு வந்து பிடிபட்ட சிறுவனை விடுவிக்கும்படி கூறி வாயில் வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்து, நெஞ்சு பகுதிகளில் கிழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவனை காவல்துறையினர் தடுத்து சுற்றிவளைத்து பிடித்து செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 


Crime: நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு.. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறார் கைது..!

ஆனால் மருத்துவமனையில் இருந்து மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்த சிறுவன், சிறுவனை விட்டுவிடும்படி கூறி காவல்துறை யினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து மீண்டும் காவல்துறையினர் சிறுவனை பிடித்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 17 மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பிளேடால் கிழித்துக்கொண்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவன் தப்பிச்செல்வதை தடுக்க அங்கு காவல்துறையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு சிறுவன் தலைமறைவாகியுள்ள சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget