மேலும் அறிய

Crime: நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு.. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறார் கைது..!

செங்கம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பெருமுட்டம் பகுதியில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் ‌உழியர்கள் தினந்தோறும் கடையை திறந்து வியாபாரம் செய்து விட்டு இரவு நேரத்தில் வேலை முடிந்த பிறகு கடையை ‌பூட்டி செல்வார்கள். இந்நிலையில் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் முடிந்த ‌பிறகு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை வழக்கம் போல பூட்டி விட்டு சென்றனர்.இதனை அங்கு இருந்து நோட்டமிட்ட மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த 3 சிறார்கள் அங்கு இருந்து ஆட்கள் சென்ற உடன் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை கொள்ளையடிப்பதற்காக கடப்பாரை உள்பட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்தனர். அப்போது நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தூரத்தில் வருவதை பார்த்ததும் டாஸ்மாக் கடைக்குள் 3 நபர்களும் பதுங்கிக்கொண்டனர்.

 


Crime: நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு.. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறார் கைது..!

 

அதனைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல்துறையினர் ‌டாஸ்மாக் கடை ‌அருகே சென்றுள்ளனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட காவல்துறையினர் டாஸ்மாக் கடையின் உள்ளே சென்றனர். அப்போது கடையில் இருந்த ஒரு சிறுவன் வெளியே வேகமாக ஓடிவந்துள்ளார். 17 வயது சிறுவனை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுவனிடம் விசாரணையில் அவனுடன் 18 வயதுடைய மேலும் 2 நபர்கள் சேர்ந்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட சிறுவனை காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் கொண்டு சென்று விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் அவனுடன் ஈடுபட்ட ஒரு சிறுவன் அங்கு வந்து பிடிபட்ட சிறுவனை விடுவிக்கும்படி கூறி வாயில் வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்து, நெஞ்சு பகுதிகளில் கிழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவனை காவல்துறையினர் தடுத்து சுற்றிவளைத்து பிடித்து செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 


Crime: நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு.. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறார் கைது..!

ஆனால் மருத்துவமனையில் இருந்து மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்த சிறுவன், சிறுவனை விட்டுவிடும்படி கூறி காவல்துறை யினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து மீண்டும் காவல்துறையினர் சிறுவனை பிடித்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 17 மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பிளேடால் கிழித்துக்கொண்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவன் தப்பிச்செல்வதை தடுக்க அங்கு காவல்துறையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு சிறுவன் தலைமறைவாகியுள்ள சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget