மேலும் அறிய

Crime : ஒருதலை காதலால் பயங்கரம்...கல்லூரிக்குள் புகுந்து மாணவியை சரமாரியாக குத்திக் கொன்ற நபர்...பெங்களூருவில் அதிர்ச்சி..

பெங்களூருவில் ஒருதலை காதல் விவகாரத்தால், கல்லூரி வளாகத்தில் இளைஞர் ஒருவர் மாணவியை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, பெங்களூர் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

மாணவி கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ராஜனகுண்டேயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர் லயசிதா (19). நேற்று காலையில் அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்திருந்தார். பின்னர் வகுப்பறையில் சக மாணவிகளுடன் அமர்ந்திருந்தார். பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வருபவர் பவன் கல்யாண். இவர் லயசிதாவை பார்க்க அவரது கல்லூரிக்கு வந்திருந்தார்.  

தற்கொலைக்கு முயன்ற நபர்

இதனை அடுத்து, கல்லூரி வளாகத்தில் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது பவன் கல்யாண் மற்றும் லயசிதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென ஆத்திரமடைந்த பவன் கல்யான், மறைத்து வைத்திருந்த கத்தியால் லயசிதாவை சராமாரியாக குத்தி உள்ளார்.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர், அதே இடத்திலேயே பவன் கல்யாண் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த கல்லூரியில் இருந்த மாணவர்கள் , ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு, பவன் கல்யாணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஒருதலை காதலால் பயங்கரம்

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  முதற் கட்ட விசாரணையில், இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். மாணவியிடம் பவன் கல்யாண் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று காதல் குறித்து மீண்டும் மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பவன் கல்யாண் கத்தியால் குத்தி மாணவியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


மேலும் படிக்க

“என் இறப்பிற்கு எஸ்.பி தான் காரணம்" - மெசேஜ் அனுப்பிவிட்டு காவல் ஆய்வாளரின் மனைவி தற்கொலை முயற்சி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: ஹரியானாவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல் - 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE 5th OCT 2024: ஹரியானாவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல் - 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: ஹரியானாவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல் - 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE 5th OCT 2024: ஹரியானாவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல் - 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Oct 5: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Kulasai Dussehra 2024: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் நெகிழ்ச்சி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் நெகிழ்ச்சி
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Embed widget