மேலும் அறிய

Crime : கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த பாலியல் தொழிலாளி..! பிணத்துடன் பைக்கில் பயணம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்

தொழில் போட்டி காரணமாக பாலியல் தொழிலாளியை தீர்த்துக்கட்டிய முன்னாள் கணவன் மற்றும் பாலியல் தொழிலாளி கைது

தொழில் போட்டி காரணமாக பாலியல் தொழிலாளியை தீர்த்துக்கட்டிய முன்னாள் கணவன் மற்றும் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இளம் பெண்ணின் சடலம்
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில்  கடந்த வாரம் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இளம்பெண்ணின் உடலை மீட்டு ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.

Crime : கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த பாலியல் தொழிலாளி..! பிணத்துடன் பைக்கில் பயணம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்
 
பாலியல் தொழிலாளி பிரியா
இதனையடுத்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கிடைத்த தடயங்களை ஆய்வு செய்த காவல்துறையினர், அதில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மர்மமான முறையில் இறந்துகிடந்த அந்த பெண், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 26 வயதான பிரியா என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்

Crime : கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த பாலியல் தொழிலாளி..! பிணத்துடன் பைக்கில் பயணம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்
 
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அது மட்டுமின்றி, இவருக்கு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான வெங்கடேசனுடன்  சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசனை பிடித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் வெங்கடேசன் திடீரென தலைமறைவான நிலையில் இந்த பெண்ணின் உயிரிழப்பிற்கும், வெங்கடேசனுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். 
 
மது, கஞ்சா பழக்கம்
 
இதனிடையே காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த பிரியா ,கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், இவரை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் புரோக்கர் ஜோதி,  பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்ததும், தெரியவந்துள்ளது. ஜோதி  பாலியல் தொழிலில் அப்பகுதியை சேர்ந்த பல இளம் பெண்களை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கு வெங்கடேசன் உறுதுணையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் மற்றும் ஜோதி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரியாவின் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
Crime : கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த பாலியல் தொழிலாளி..! பிணத்துடன் பைக்கில் பயணம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்
 
3 வயது சிறியவர் உடன் திருமணம்
 
காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரியா காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நவீன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். நவீன் பிரியாவை விட மூன்று வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ஆம் ஆண்டு இருவருக்கும் இறந்த நிலையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

Crime : கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த பாலியல் தொழிலாளி..! பிணத்துடன் பைக்கில் பயணம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்
 
இருவருக்கிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் பிரியா மற்றும் நவீன் ஆகியோர் பிரிந்து வாழ்ந்து உள்ளனர். இந்த நிலையில் தான் கணவனை இழந்த, காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த கல்பனா என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் நவீனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சின்ன காஞ்சிபுரம் திருவீதி குளம், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் அருகே வீடு எடுத்து தங்கி கல்பனா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கல்பனா மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
 
பார்க்கும்போதெல்லாம் திட்டித்தீர்த்த பிரியா
 
பாலியல் தொழில் செய்து வந்த பிரியா தனது முதல் கணவர் நவீனை, பொது இடங்களில் பார்க்கும் பொழுதெல்லாம், அவமதிக்கவும் செய்துள்ளார். தவிர கல்பனா, அவரது தம்பி காளிதாஸ் ஆகியோர், காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பது குறித்து, காவல்துறையினருக்கு பிரியா தகவல் தெரிவித்துள்ளார். இதனால்  கல்பனா, காளிதாஸ் கைதாகி சில மாதங்களுக்கு முன்பு சிறைக்குச் சென்றனர்.
 

Crime : கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த பாலியல் தொழிலாளி..! பிணத்துடன் பைக்கில் பயணம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்
 
பிரியாவுக்கு ஸ்கெட்ச்
 
சிறையில் இருந்து வெளியே வந்த கல்பனா, நவீனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு, பிரியாவை காஞ்சிபுரத்திற்கு ஒரு தனியார் ஓட்டலுக்கு சமாதானம் பேச வர வழைத்துள்ளனர். மூவரும் ஒன்றாக சேர்ந்து மதுவும்  அருந்தியுள்ளனர். பின்னர் சின்ன காஞ்சிபுரம் திருவீதி குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு பிரியாவை அழைத்து சென்றுள்ளனர் . அங்கு நவீனும், கல்பனாவும் சேர்ந்து பிரியாவை அடித்து, துப்பட்டா மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 
 
பிணத்துடன் பைக்கில் ட்ராவல்
 
கொலை செய்து பிரேதத்தை இருசக்கர வாகனத்தில்,  வைத்துக்கொண்டு,  வாலாஜாபாத்  வழியாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தெரேசாபுரம், காலி நிலத்தில் வீசி விட்டு பிரியாவின் முகத்தை எரிக்க முயற்சி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். காவல் துறையினர் தீவிரமாக நடத்திய விசாரணையில், நவீன் மற்றும் கல்பனா ஆகிய இருவரும் தொழில் போட்டியின், காரணமாக தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Crime : கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த பாலியல் தொழிலாளி..! பிணத்துடன் பைக்கில் பயணம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்
தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக பாலியல் தொழிலாளி பிரியா கொலை வழக்கில் முன்னாள் கணவன் மற்றும் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget