மேலும் அறிய

Crime : கோவையில் பரபரப்பு.... துப்பாக்கியுடன் வழிப்பறியில் ஈடுபட முயற்சி; 3 பேர் கைது

காவல் துறையினர் சோதனை செய்த போது குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி, அரிவாள் ஆகியவை பையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கோவை லங்கா கார்னர் பகுதியில் துப்பாக்கியுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை உக்கடம் காவல் துறையினர் லங்கா கார்னர் இரயில்வே பாலம் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி திரிந்தனர். இதனைத் தொடர்ந்து 3 பேரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் வைத்திருந்த பையினை காவல் துறையினர் சோதனை செய்தனர். 

அதில் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி, அரிவாள் ஆகியவை பையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜித்குமார் (28), கடலூர் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சந்திர சேகர் (37) மற்றும் கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த கெளதம் (28) ஆகியோர் என்பதும், வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் காவல் துறையினரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


Crime : கோவையில் பரபரப்பு.... துப்பாக்கியுடன் வழிப்பறியில் ஈடுபட முயற்சி; 3 பேர் கைது

இதேபோல கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மேம்பால தூண்களில் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் சுவரோட்டிகள் ஓட்டி வருவதை தடுக்கும் வகையில், வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றனர். அதில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களை விவரிக்கும் வகையில் சுவரோவியங்கள் வரையப்பட்டு இருந்தன. இந்நிலையில் அந்த சுவரோவியங்களில் விஸ்வ ஜன முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கருப்பு நிற பெயிண்டை ஊற்றி அழித்துள்ளார். 

விஸ்வகர்மா மக்களின் ஐந்தொழில் ஒன்றான பொற்கொல்லரை இழிவு படுத்தி தவறாக சித்தரித்து கோவலன் மரணத்திற்கும் திருடியதற்கு பொற்கொல்லர்கள் தான் காரணம் என்று ஓவியங்கள் தவறாக வரைந்து உள்ளார்கள் என அவர் தெரிவித்தார். கோவை மாநகர மைய பகுதியில் மட்டும் 4 லட்சம் தங்க நகை தொழில் செய்யும் பொற்கொல்லர்கள் இருக்கிறார்கள் எனவும், திராவிட முன்னேற்ற கழகம் விஸ்வகர்மா மக்கள் முன்னேற்றத்திற்கு என்று பல நல்ல திட்டங்கள் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுகவின் பெயரைக் கெடுக்கும் விதமாக கோவை மாவட்டம் நிர்வாகம் செயல்படுகிறது என அவர் கூறினார். இந்நிலையில் நகரத்தின் அழகைக் கெடுத்து ஆக்கப்பூர்வமான உருவப்படங்களில் கருப்பு மை ஊற்றியதாக வேல்முருகன் மீது காட்டூர் காவல் துறையினர் பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும் வேல் முருகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Embed widget