மேலும் அறிய

கரூர் அருகே டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

500 டாஸ்மார்க் கடைகளில் பழைய ஜெயங்கொண்டம் டாஸ்மாக் கடை பெயர் இடம் பெறவில்லை.

கரூர் அருகே பழைய ஜெயங்கொண்டத்தில்  டாஸ்மாக் கடையினை பூட்டு போட்டு கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

 

 


கரூர் அருகே டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது வாங்க வருபவர்கள் அருகில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்திலும், விளை நிலங்களிலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்வதாகவும் மேலும் பகல் இரவு நேரங்களில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் கூறி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கடந்த ஆறு ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்  பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாகவும் அதில் இந்த கடையும் உள்ளதாகவும் கூறி இருந்தனர்.

 

 


கரூர் அருகே டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

 

தமிழக அரசு வெளியிட்ட மூடப்படுவதாக கூறிய 500 டாஸ்மார்க் கடைகளில் பழைய ஜெயங்கொண்டம் டாஸ்மாக் கடை பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையினை பூட்டு பூட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர், லாலாப்பேட்டை போலீசார், அரசு டாஸ்மாக் உதவி மேலாளர் மதிவாணன் மற்றும் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பத்மா ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

 


கரூர் அருகே டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

 

அதில் டாஸ்மாக் உதவி மேலாளர் மதிவாணன் கூறுகையில், தற்போது இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இனி விற்பனைக்காக திறக்கப்படாது எனவும், கடையில் உள்ள மது பாட்டில்களை சில நாட்களுக்குள் கடையை திறந்து எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget