மேலும் அறிய

‛வீட்டை எழுதிக் கொடு...’ மிரட்டலால் தீக்குளித்த பெண்... சென்னை கந்து வட்டி தம்பதி கைது!

Crime: பயந்து போன சித்ரா, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

 
சென்னை புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். 60 வயதாகும் இவருக்கு 53 வயதில் சித்ரா என்கிற மனைவி உள்ளார். நாகராஜன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் திருமணம் ஆகி சென்று விட்டார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கால கட்டத்தில் நாகராஜுக்கு சரியான வேலை கிடைக்காததால் சித்ரா சிறுக சிறுக அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

‛வீட்டை எழுதிக் கொடு...’ மிரட்டலால் தீக்குளித்த பெண்... சென்னை கந்து வட்டி தம்பதி கைது!
4 லட்ச ரூபாய் வரை வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரிவர வாங்கிய பணத்தை தர முடியாத காரணத்தினால் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து சுமார் 30 லட்சம் ரூபாய் வரை தர வேண்டும் என ரங்கநாயகி மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் , கடந்த வியாழ கிழமை அன்று  ரங்கநாயகி மற்றும் அவருடன் இரண்டு பேர் வந்து வாங்கிய கடனுக்கு வீட்டை எழுதி கொடுத்து விடுங்கள் இல்லையென்றால் நடப்பதே வேறு என மிரட்டி சென்றுள்ளனர்.

‛வீட்டை எழுதிக் கொடு...’ மிரட்டலால் தீக்குளித்த பெண்... சென்னை கந்து வட்டி தம்பதி கைது!
 
இதனால் பயந்து போன சித்ரா, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சித்ராவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு 50 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சித்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சித்ரா மருத்துவமனையில் கந்து வட்டி கொடுமையால் தான்  மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாகவும். என்னை ரங்கநாயகி மற்றும் அவரது கணவர் சேகர் அவரது மகன் சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து எனது வீட்டை எழுதி தரும்படி மிரடடினார்கள் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

‛வீட்டை எழுதிக் கொடு...’ மிரட்டலால் தீக்குளித்த பெண்... சென்னை கந்து வட்டி தம்பதி கைது!
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய பேசின்பிரிட்ஜ் போலீசார் , புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி 52 மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் 55 ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்மாவட்டங்களில் தலை தூக்கியிருந்த கந்து வட்டி பிரச்சனை, தற்போது தலைநகர் சென்னையிலும் உயிரை காவு வாங்கும் அளவிற்க அட்ராசிட்டியாகியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் சென்னையில், இது மாதிரியான சூழல் நிலவுவது, மக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும். எனவே, கந்து வட்டி கும்பல் மீதான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர். 
 

தலைப்பு செய்திகள்

காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs SPV: பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
TN Govt: தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
TN Weather Update: இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
EPS vs Vijay: 9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
EPF Intrest: EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
Embed widget