மேலும் அறிய

Crime: சென்னையின் பிரபல தியேட்டர் தண்ணீர் தொட்டியில் மிதந்த ஆண் சடலம்..! கொலையா..? பகீர் தகவல்கள்

ரோகிணி தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் 7 நாடகள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் 7 நாடகள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிணி தியேட்டர்

சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ரோகிணி தியேட்டர் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தியேட்டர்களில் ஒன்று ரோகிணி தியேட்டர். இன்று (பிப்ரவரி, 3) மதியம் இந்த தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ராமமூர்த்தி என்பவர் வந்துள்ளார். 

ஆண் சடலம்

அப்போது தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவது போல இருந்துள்ளது. அதன் பின்னர் ராமமூர்த்தி தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது துர்நாற்றம் அதிகமாக வீசியது. அதன் பின்னர் அவர் தண்ணீர் தொட்டிக்குள் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது, தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததைப் பார்த்து பதறிப்போய் தியேட்டர் மேனேஜரிடம் உடனே தெரிவித்துள்ளார். 

பின்னர் தியேட்டர் மேனேஜர் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் இருப்பது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக தியேட்டருக்கு வந்த காவல் துறையினர் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்க, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சடலத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சடலம் மீட்கப்பட்டதும்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினர் விசாரணை 

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர் ரோகிணி தியேட்டரில் பணியாற்றி வந்தவர் என்றும், அவர்  பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (42) என்பது தெரியவந்துள்ளது. மேலும்,  ரோகிணி தியேட்டரில் பிளம்பராக வேலை பார்த்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.  சடலமாக மீட்கப்பட்ட வெங்கடேச பெருமாள்  கடந்த ஜனவரி  26-ம் தேதி மது போதையில் வேலைக்கு  வந்ததுள்ளார்.  மறுநாளில்  இருந்து வேலைக்கு  வரவில்லை என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையா? 

இதனையடுத்து காவல் துறையினர் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த வெங்கடேச பெருமாள் மது போதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? தவறி விழுந்து இருந்தால் எப்படி தண்ணீர் தொட்டி மூடப்பட்டிருக்கும்? அல்லது யாராவது அவரை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டு கொலை செய்தார்களா? அல்லது, எதற்காக அவர் தண்ணீர் தொட்டிக்கு சென்றார்?  என்பது குறித்து தியேட்டர் ஊழியர்களிடம் காவல்துறையினர் அடுத்தடுத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் காவல் துறையினரின் விசாரணை அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என கூறப்பட்டுள்ளது. 

சென்னையில் மிகவும் பிரபலமான ரோகிணி தியேட்டரில்,  ஊழியர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தியேட்டருக்கு கடந்த ஒரு வாரமாக வந்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget