மேலும் அறிய

Crime: சென்னையின் பிரபல தியேட்டர் தண்ணீர் தொட்டியில் மிதந்த ஆண் சடலம்..! கொலையா..? பகீர் தகவல்கள்

ரோகிணி தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் 7 நாடகள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் 7 நாடகள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிணி தியேட்டர்

சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ரோகிணி தியேட்டர் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தியேட்டர்களில் ஒன்று ரோகிணி தியேட்டர். இன்று (பிப்ரவரி, 3) மதியம் இந்த தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ராமமூர்த்தி என்பவர் வந்துள்ளார். 

ஆண் சடலம்

அப்போது தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவது போல இருந்துள்ளது. அதன் பின்னர் ராமமூர்த்தி தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது துர்நாற்றம் அதிகமாக வீசியது. அதன் பின்னர் அவர் தண்ணீர் தொட்டிக்குள் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது, தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததைப் பார்த்து பதறிப்போய் தியேட்டர் மேனேஜரிடம் உடனே தெரிவித்துள்ளார். 

பின்னர் தியேட்டர் மேனேஜர் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் இருப்பது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக தியேட்டருக்கு வந்த காவல் துறையினர் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்க, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சடலத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சடலம் மீட்கப்பட்டதும்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினர் விசாரணை 

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர் ரோகிணி தியேட்டரில் பணியாற்றி வந்தவர் என்றும், அவர்  பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (42) என்பது தெரியவந்துள்ளது. மேலும்,  ரோகிணி தியேட்டரில் பிளம்பராக வேலை பார்த்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.  சடலமாக மீட்கப்பட்ட வெங்கடேச பெருமாள்  கடந்த ஜனவரி  26-ம் தேதி மது போதையில் வேலைக்கு  வந்ததுள்ளார்.  மறுநாளில்  இருந்து வேலைக்கு  வரவில்லை என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையா? 

இதனையடுத்து காவல் துறையினர் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த வெங்கடேச பெருமாள் மது போதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? தவறி விழுந்து இருந்தால் எப்படி தண்ணீர் தொட்டி மூடப்பட்டிருக்கும்? அல்லது யாராவது அவரை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டு கொலை செய்தார்களா? அல்லது, எதற்காக அவர் தண்ணீர் தொட்டிக்கு சென்றார்?  என்பது குறித்து தியேட்டர் ஊழியர்களிடம் காவல்துறையினர் அடுத்தடுத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் காவல் துறையினரின் விசாரணை அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என கூறப்பட்டுள்ளது. 

சென்னையில் மிகவும் பிரபலமான ரோகிணி தியேட்டரில்,  ஊழியர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தியேட்டருக்கு கடந்த ஒரு வாரமாக வந்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget