மேலும் அறிய

சாலையில் காணாமல்போன கார் , OLX இணையதளத்தில் விற்பனை - அதிர்ச்சியில் போலீசார்

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, ரெக்கவரி வாகனம் மூலம் கடத்தி , OLX இணையதளத்தில் விற்க முயன்ற நபர் கைது.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மாயம்

சென்னை வியாசர்பாடி B.B.ரோட்டில் வசிக்கும் ரபேல் ( வயது 63 ) என்பவர் வீட்டினருகில் கார் பழுது பார்க்கும் ஒர்க் -  ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராணி ( வயது 60 ) என்பவர் அவரது வெள்ளை நிற Honda Civic காரை பழுது பார்க்க விட்டு சென்றதாகவும், தான் அந்த காரை அருகில் AA ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் 01.08.2025 அன்று மாலை பார்த்த போது காரை யாரோ திருடிச் சென்றதாகவும், காரை கண்டுபிடித்து தருமாறும் ரபேல் என்பவர் P-3 வியாசர்பாடி குற்றப்பரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

OLX - இணையதளத்தில் விற்பனை ?

P-3 வியாசர்பாடி குற்றப்பரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து,  குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அரவிந்த் ( வயது 20 ) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பிரதீப்ராஜா என்பவர் தெருவில் நின்றிருந்த காரை படம் பிடித்து விற்பனை செய்யப்பட உள்ளதாக OLX இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்ததும், பழைய கார்களை வாங்கி விற்கும் அரவிந்த் என்பவர் எவ்வித ஆவணங்களும், சாவியும் இல்லாமல் மேற்படி காரை வாங்கி கொள்வதாக பிரதீப்ராஜாவிடம் கூறி ரூ.1.25 லட்சத்திற்கு விலைபேசி, காரை வாங்கி கொண்டு தனியாரிடமிருந்து ரெக்கர் வாகனத்தை வாடகைக்கு எடுத்து , ரெக்கர் வாகனம் மூலம் காரை தனது இடத்திற்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

வாகனம் பறிமுதல்

அதன் பேரில், வியாசர்பாடி பகுதியில் மறைத்து வைத்திருந்த மேற்படி கார் மீட்கப்பட்டு , குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ரெக்கர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய நபரை காவல் குழுவினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அரவிந்த் , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Show Room - ல் , 85 ஐ - போன்களை திருடி விற்ற நிறுவன மேலாளர் கைது

தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் தேவநாதன் என்பவர் சென்னை போரூர், ஆற்காடு சாலையிலுள்ள ஷோரூமில் மேலாளராக செய்து வந்த கோயில்ராஜ் ( வயது 31 ) என்பவர் நிறுவனத்தின் ஐ - போன்களை திருடி விற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் கிளை ஷோரூமின் கணக்குகளை சரிபார்த்த போது , கோயில்ராஜ் நிறுவனத்தின் 85 ஐ - போன்களை திருடி விற்பனை செய்து , நிறுவன கணக்கில் வரவு வைக்காமல் தலைமறைவானதாகவும், நபரை கண்டுபிடித்து தங்களது நிறுவனத்தின் சுமார் ரூ.62 இலட்சம் மதிப்புள்ள 85 ஐபோன்களை மீட்டு தரும்படியும், தேவநாதன் T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , தலைமறைவான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கோயில்ராஜ் (வயது 31) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கோயில்ராஜ் பி.டெக் படித்து பல செல்போன் ஷோரூம்களில் வேலை செய்து வந்ததும் , இறுதியாக மேற்படி ஷோரூமில் வேலை செய்தபோது , கடன் தொல்லை காரணமாக ஷோரூமிலிருந்த ஐ - போன்களை சிறிது, சிறிதாக என 85 ஐ - போன்களை திருடி விற்றதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கோயில்ராஜ், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget