மேலும் அறிய

Chengalpattu: திருப்போரூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைத்த காதல் ஜோடி -கொலை மிரட்டல் விடுவதாக புகார்

Thiruporur News: திருப்போரூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி தஞ்சம். பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்போரூர் போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த முள்ளிபாக்கம் அருகே சிறிய சிறிய விப்பேடு  கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா (வயது 19) 12 ஆம் வகுப்பு வரை படித்து வெங்கூர் தனியார் கம்பனியில் வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக அதே கம்பெனியில் பணியாற்றும்  ஒரகடம் ஊராட்சி, கட்டைகழனி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதல் விவகாரம் மீனாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து,  மீனாவின் பெற்றோர்கள்  கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மீனா நேற்று மாமல்லபுரம் கங்கை அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மீனா தனது கணவருக்கும் பெற்றோரிடம் இருந்து கொலை மிரட்டல் விடப்பட்டதால் நேற்று இரவு 7 மணியளவில் திருப்போரூர் காவல் நிலையத்தில் தனது காதல் கணவர் லோகநாதன் என்பவருடன் வந்து தஞ்சமடைந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி புகார் மனு ஒன்றை அளித்தார். 
 
திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார்
 
புகார் மனுவில்  கூறி உள்ளதாவது, நான் வெங்கூர் கிராமத்தில் வேலைக்கு சென்றபோது என்னுடன் வேலை செய்து வந்த லோகநாதன் என்பவருடன் கடந்த 1 வருடமாக பழகி வந்தேன். இந்த தகவல் எனது குடும்பத்தாருக்கு தெரிய வந்து லோகநாதனுடன் பழகக் கூடாது என்று மிரட்டி மீறி பழகினால் உன்னையும் உனது அவனையும், அவன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். பின்னர் (மீனா) எனக்கு  வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி என்னுடைய சம்மதம் இன்றி வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விட்டனர்.  மேலும், என்னை வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்து விட்டனர். இதனிடையே நான் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 24ஆம் தேதி மாமல்லபுரம் கங்கையம்மன் கோயிலில் லோகநாதனை திருமணம் செய்துக் கொண்டேன். இந்நிலையில் எங்களையும், எனது கணவரின் குடும்பத்தாரையும் கொன்று விடுவோம் என்று சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். 
 
கொலை மிரட்டல்
 
எங்கள் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆள்பலம், பண பலம் அதிகமாக இருப்பதால் எங்களை என்னவென்றால், செய்வார்கள், ஆகவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் மீனா கூறி இருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட திருப்போரூர் காவல் ஆய்வாளர்  வெங்கடேசன் இருவரும் மேஜர் ஆகி விட்டதாலும், கோயிலில் தாலி கட்டி திருமணம் நடைபெற்று விட்டதாலும் சட்டப்பூர்வமாக உங்களை பிரிக்க முடியாது என்றும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி இருவரின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார். 
 
எதிர்ப்பை  மீறி இருவரும் திருமணம்
 
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெண் வீட்டில் பண பலம் அதிகமாக இருப்பதால் ஏழை வீட்டில் உள்ளவரை திருமண செய்து வைக்க முன்வருவதில்லை. இதனால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மாப்பிளை வீட்டார் மீனா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அதற்கு அவர்களின் பெற்றோர் மறுத்து வேறொரு மாப்பிளை பார்த்து நிச்சயம் செய்து முடித்து  திருமணம் ஏற்பாடு செய்தனர் அத்தனையும் மீறி இருவரும் திருமண செய்து கொண்டனர். இதனால் பெண் வீட்டார் பெண்ணையும் அவன் கூட எப்படி வாழ்கிறாய் என்று கூறி கொலை மிரட்டல் விட்டுள்ளதாக காதல் ஜோடிகள் தெரிவித்துள்ளனர். 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Breaking News LIVE: பிரதமருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்
Breaking News LIVE: பிரதமருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Embed widget