மேலும் அறிய

பிரீ பையரில் அறிமுகம்...இன்ஸ்டாவில் வீடியோ கால் - அறிமுகம் இல்லாத நபர்களிடம்  ஜாக்கிரதை என போலீஸ் எச்சரிக்கை

ஆன்லைன் மூலமாக ஏற்பட்ட பழக்கம், இன்ஸ்டாகிராமில் காதலாக மாறி, வீடியோ காலில் எல்லை மீறியதால் அரங்கேறிய கொடூரம்.

சமீப காலமாக, ஆன்லைன் கேம்ஸ் மற்றும்  இன்ஸ்டாகிராம்  பயன்பாடு என்பது இன்றைய தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் மூலம்,  நண்பர்களாக பழகி நாளில் , நாளடைவில் அது காதலாக மாறுகிறது. இது ஒருபுறம் இருக்க, அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்படும் நட்பு,  தீமையிலும் முடிகின்றன.  இதன் மூலம்,  பல்வேறு இடங்களில்,  குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதையும் பார்க்க முடிகிறது.

பிரீ பையரில் அறிமுகம்...இன்ஸ்டாவில் வீடியோ கால் - அறிமுகம் இல்லாத நபர்களிடம்  ஜாக்கிரதை என போலீஸ் எச்சரிக்கை

அந்தவகையில் , செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர்  பகுதியைச் சேர்ந்த  16 வயது  சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர்  தனது பெற்றோரின்  செல்போனில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம்  பல நண்பர்களிடம் அவர் உரையாடுவதும்,  வீடியோ   காலில் பேசுவதையும் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். பெற்றோரும் செல்போன் பயன்படுத்துவது இக்காலத்தில், சாதாரண விஷயம்  என்பதாலும்,  பள்ளிகளில் கூட ஆன்லைன் வகுப்புகள் அவ்வப்போது எடுப்பதனாலும் , அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்தநிலையில்  வீட்டிலிருந்து ,  நகை காணாமல்  போய் உள்ளது.  அதேபோன்று,  வங்கி கணக்குகளிலும் இருந்தும் பணம்  குறைந்துள்ளது.  இதனால்  பெற்றோர் சந்தேகம் அடைந்து மாணவியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்பொழுது பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல்கள  காத்திருந்தன.


பிரீ பையரில் அறிமுகம்...இன்ஸ்டாவில் வீடியோ கால் - அறிமுகம் இல்லாத நபர்களிடம்  ஜாக்கிரதை என போலீஸ் எச்சரிக்கை

பெற்றோர் விசாரித்ததில், மாணவிக்கு ப்ரீ ஃபயர் ஆன்லைன் கேம் வழியாக இன்ஸ்டாகிராம் மூலம்,   திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த இசக்கி முத்து  என்பவரின் மகன்  வேல்முருகன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேல்முருகன் பொறியியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.  வேல்முருகன் மற்றும் பள்ளி மாணவி இணைந்து, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளனர்.  நாளடைவில் இவர்களுடைய நட்பு இன்ஸ்டாகிராம் காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் ஆன்லைன் விளையாட்டுக்கு பணம் தேவைப்படுகிறது எனக்கூறி மாணவியிடம், வேல்முருகன் அவ்வப்பொழுது  பணம் கேட்டு தொந்தரவு செய்ய துவங்கியுள்ளார்.


பிரீ பையரில் அறிமுகம்...இன்ஸ்டாவில் வீடியோ கால் - அறிமுகம் இல்லாத நபர்களிடம்  ஜாக்கிரதை என போலீஸ் எச்சரிக்கை

 

மேலும், ஒருபுறம் ஆன்லைன் விளையாட்டு,  என்று சென்று கொண்டிருந்தாலும்,  இருவருக்கிடையே நெருக்கமும் ஆன்லைன் மூலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. வீடியோ காலிலும் எல்லை மீறி  இருவரும் பேசி வந்துள்ளனர். இந்தநிலையில், அடிக்கடி பணம் கேட்டு வேல்முருகன் தொந்தரவு செய்வதால், மாணவி  இனி பணம் தர முடியாது என தெரிவித்துள்ளார். அப்பொழுது  வீடியோ காலில் எல்லை மீறி  பேசிய  ஸ்கிரீன்ஷாட்களை வைத்துக்கொண்டு  வேல்முருகன் மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த 12 சவரன் நகையை  கொரியர் மூலமாகவும் வேல்முருகன் மாணவியை ஏமாற்றியும் , மிரட்டியும் பெற்றுள்ளார்.   


பிரீ பையரில் அறிமுகம்...இன்ஸ்டாவில் வீடியோ கால் - அறிமுகம் இல்லாத நபர்களிடம்  ஜாக்கிரதை என போலீஸ் எச்சரிக்கை
இதனை அடுத்து மாணவியின் தாய் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்,  தனிப்படைபோலீசார்  மொபைல் சிக்னல் வழியாக, திருநெல்வேலியில்  வேல்முருகன் இருப்பதை உறுதி செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் அவரை  கைது செய்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் கா வல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீசார், வேல்முருகன் மீது  போக்சோ வழக்கு  மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கு,  ஐடி  act உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஆன்லைன் வழியாக  பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பெற்றோர்களும் மாணவ, மாணவிகளை கண்காணிக்க வேண்டும்.  அறிமுகம் இல்லாத நபர்களிடம்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget