மேலும் அறிய

இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் தோழி உயிரிழந்ததால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் சபரீனா(20).‌ இவர் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கமலம்பூண்டி பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரின் மகன் யோகேஸ்வரன் (20) என்பவருடன் சபரீனா நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

நண்பருடன் இருசக்கர வாகனம் பயணம் 

இன்று இருவரும் யோகேஸ்வரனின் இருசக்கர வாகனத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மகாபலிபுரத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் சென்று விட்டு இருவரும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருக்கழுக்குன்றம் வந்துள்ளனர். அப்போது மாமல்லபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , பூஞ்சேரி சந்திப்பு அருகே , மதியம் 12.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரத்தில் இருந்து, திருக்கழுக்குன்றம் நோக்கி பூஞ்சேரி சந்திப்பை கடக்க முயன்ற போது, அவருக்கு பின்னால் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த பாண்டிச்சேரி அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் மோதியதில், இருசக்கர வாகனம் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து வந்த சபரீனா சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த சபரீனா ரத்த வெள்ளத்தில், துடி துடித்தார். இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு, பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று பரிசோதனை செய்ததில், சபரீனா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இத்தகவலை அறிந்த அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்த யோகேஸ்வரன் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதுள்ளார்.

இளைஞர் தற்கொலை

தொடர்ந்து அழுது கொண்டே பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து, கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி மார்க்கமாக சென்ற பாண்டிச்சேரி அரசு பேருந்தின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.‌ தற்கொலை செய்து கொண்ட யோகேஸ்வரன் மற்றும் விபத்தில் உயிரிழந்த சபரீனா ஆகிய இருவரின் உடலை மீட்டு மாமல்லபுரம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து மற்றும் தற்கொலை தொடர்பாக தனித்தனி வழக்குகள் பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரீனா மற்றும் யோகேஸ்வரன் ஆகிய இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மாமல்லபுரத்திற்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. தான் அழைத்து வந்த, தோழி சபரீனா உயிரிழந்தால் சோகத்திலும் மற்றும் இதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் யோகேஸ்வரன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண்  பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண்  பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
சாம்சங் நிறுவனத்திற்கு தொடரும் தலைவலி... குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
சாம்சங் நிறுவனத்திற்கு தொடரும் தலைவலி... குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
Embed widget