மேலும் அறிய

Crime: காலையிலேயே பயங்கரம்: வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்; பத்திரிகையாளரை சரமாரியாக சுட்டுக் கொன்ற கொடூரம்...என்ன நடந்தது?

பீகாரில் பத்திரிகையாளர் ஒருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: பீகாரில் பத்திரிகையாளர் ஒருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விமல்குமார் (41). இவர் டைனின் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தார். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ராணிகஞ்ச் பகுதியில் உள்ள பிரேம் நகரில்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டியுள்ளார். இதனை அடுத்து, கதவை திறந்து வெளியே வந்ததும் மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில்  கிடந்த விமல் குமார் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதனை அடுத்து, துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்தனர். அங்கு அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். பின்னர், அவரது மனைவி பதறி அடித்து வெளியே வந்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விமல் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

இதற்கிடையில், சம்பவம் நடந்த உடனேயே, மாவட்டம் முழுவதிலும் இருந்து பத்திரிகையாளர்கள் அராரியாவில் உள்ள சதர் மருத்துவமனையில் அமைந்துள்ள பிரேத பரிசோதனை அறைக்கு அருகில் கூடினர். இந்த சம்பவம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யுமாறு ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ”பத்திரிகையாளரை  சுட்டுக் கொன்ற மர்ம நபர்களை தேடி வருகிறோம். கடந்த 2019ஆம் ஆண்டு விமல் குமாரின் சசோதரர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விமல் குமார் முக்கிய சாட்சியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த விசாரணையிலும் விமல் குமாரை சாட்சி அளிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே விமல் குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


மேலும் படிக்க 

SBI Survey On Middle Class: நீங்களும் லட்சாதிபதி... எப்போது தெரியுமா? நடுத்தர குடும்பங்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கும் எஸ்பிஐ - வெளியான ரிப்போர்ட்

தலைப்பு செய்திகள்

சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
Embed widget