மேலும் அறிய

Crime: இதய நோய்தான் எனது பிரச்சனை.. கடிதம் எழுதிவைத்து தற்கொலை.. காரில் கிடைத்த நச்சுவாயு சிலிண்டர்! நடந்தது என்ன?

பெங்களூரில் 52 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது காரில் விஷவாயுவை நிரப்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரில் 52 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது காரில் விஷவாயுவை நிரப்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொழில்நுட்ப வல்லுநரான 52 வயதான விஜய் குமார், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இதயத்தில் பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், இதய நோயாளி என்றே முழுமையாக நினைத்துகொண்ட அவர், உடல்நிலை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

இந்தநிலையில், மன உளைச்சலில் இருந்த காரணத்தினால் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்து நச்சு தன்மை கொண்ட நைட்ரஜன் வாயு நிரப்பபட்ட சிலிண்டரை வாங்கியுள்ளார். தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தனது வீட்டை விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிய விஜயகுமார், அலுவலகத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அவர் தனது ஃபோர்டு ஈகோஸ்போர்ட்டை ஒரு பூங்காவிற்கு அருகில் நிறுத்தியுள்ளார். தொடர்ந்து, தனது காரை யாரும் பார்த்திடாத வகையில் மழை கவரால் முழுவதும் மூடிவிட்டு, உள்ளே சென்று அமர்ந்துள்ளார். 

காரின் பின் இருக்கைக்கு அமர்ந்து கொண்ட விஜயகுமார் நைட்ரஜன் சிலிண்டரின் முனையைத் திறந்து, வாகனத்தில் நச்சு வாயுவை நிரப்பியுள்ளார். தொடர்ச்சியாக மூச்சு விடமுடியாமல் சில மணிநேரங்களுக்குப் பிறகு இறந்தார். 

அந்த வழியாக சென்றவர்கள் காரை பெட்ஷீட்டால் மூடியிருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே விஜய்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இறந்த விஜய்குமார் காரை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், எனது கார் முழுவதும் நச்சுவாயு நிரம்பியுள்ளது. வேறு யாரும் கதவை திறக்கவேண்டாம். காரின் கதவை போலீசார்தான் திறக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

இதுகுறித்து வடக்கு பெங்களூர்  காவல்துறை துணை ஆணையர் வி பாட்டீல் தெரிவிக்கையில், “ காருக்குள் ஒரு தற்கொலைக் குறிப்பும் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் விஜய் குமார் தனது இதய நோய் காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்” என அந்த கடிதத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார். 

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்கொலைக்கான காரணங்கள் : 

தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

மாநிலம் வாரியாக தற்கொலை விவரம்

மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)

அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
"10 லட்சம் கொடு.. இல்லைன்னா வேலைய நிறுத்து!" - ஒப்பந்ததாரரை மிரட்டிய கும்பல் சிக்கியது எப்படி?
"ஸ்கார்பியோ காரில் வந்து மாடுகளை திருடும் கும்பல்!"- போலீசாருக்கே சவால் விடும் பலே திருடர்கள் - சிக்குவது எப்போது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
TNCC President : ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செல்வப்பெருந்தகை’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
‘செல்வப்பெருந்தகை ராஜினாமா?’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..?
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Super El Nino : உஷார்... சூப்பர் எல் நினோ வரப்போகுது.! முன்னெச்சரிக்கையாக இருங்க- அலர்ட் விடுத்த வெதர்மேன்
உஷார்... சூப்பர் எல் நினோ வரப்போகுது.! முன்னெச்சரிக்கையாக இருங்க- அலர்ட் விடுத்த வெதர்மேன்
Congress:
Congress: "DMK-வுக்கு டஃப் கொடுக்கணும், செல்வப்பெருந்தை மாதிரி வேண்டாம்" புதிய தலைவரை தேடும் காங்கிரஸ்
Embed widget