மேலும் அறிய

Crime : திருமணம் செய்வதாக ஒருவரும், வேலை வாங்கி கொடுப்பதாக இருவரும்.. ஆந்திராவில் அரங்கேறிய பாலியல் கொடூரம்..!

மனநலம் குன்றிய பட்டியல் இனப்பெண்ணை மருத்துவமனையில் மூன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில்  மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர்  கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், திருமணம் செய்வதாக உறுதியளித்து அந்த பெண்ணை அங்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனை வளாகத்தில் 23 வயதான பட்டியல் இனத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புதன்கிழமை காவல்துறையில் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நகர காவல்துறை ஆணையர் காந்தி ராணா டாடா கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் காவல்துறையை அணுகி பெண் காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்த பெண் கடைசியாக மருத்துவமனையின் ஒப்பந்த ஊழியர் தாரா ஸ்ரீகாந்துடன் காணப்பட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ஸ்ரீகாந்த் உறுதியளித்து  பெண்ணை செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு வரச் செய்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த அவர், திருமணம் செய்வதாக உறுதியளித்து அந்த பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் இரவு முழுவதும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து, மருத்துவமனையின் துப்புரவு பணியாளர்கள் அறையில் விட்டுவிட்டார். அறையில் அப்பெண்ணை பார்த்ததும், துப்புரவுப் பணியாளர்களான சென்னு பாபு ராவ் மற்றும் ஜே பவன் கல்யாண் ஆகிய இருவரும், மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்” என்றார்.

பின்னர், ஸ்ரீகாந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் துப்புரவு பணியாளர்கள் அறையில் இருந்து கயிற்றால் கட்டப்பட்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget