மேலும் அறிய

Female Infanticide | பெண்ணாய் பிறந்ததால், பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக்கொலை : கொடூரனை தேடும் காவல்துறை..!

ஆந்திர மாநிலம் விஜியநகரம் மாவட்டம் ஜோதிமமிடிவாலசா எனும் கிராமத்தைச் சேர்ந்தவன் பிரசாத். இவனுடைய மனைவி லக்‌ஷ்மி. இவர்களுக்கு ஸ்ரீ, பிரவாணி என்று இரண்டு பெண் குழந்தைகள்.

அரக்கத்தனம் என்றால் அது இதுதானோ, அவன் இவன்தானோ என்றெண்ணும் அளவுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன் தான் பெற்ற பிள்ளையையே சுவரில் தலையை மோதவைத்துக் கொன்றிருக்கிறான். ஆந்திர மாநிலம் விஜியநகரம் மாவட்டம் ஜோதிமமிடிவாலசா எனும் கிராமத்தைச் சேர்ந்தவன் பிரசாத். இவனுடைய மனைவி லக்‌ஷ்மி. இவர்களுக்கு ஸ்ரீ, பிரவாணி என்று இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

முதல் குழந்தை பிறந்த நாளிலிருந்தே லக்‌ஷ்மியுடன் சண்டை சச்சரவு என்றே பிரசாத் இருந்துள்ளான். பெண் பிள்ளை பிறந்ததுதான் அதற்குக் காரணம். இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்கும் எல்லாம் சரியாகிவிடும் என்றே வன்முறையை சகித்துக் கொண்டு வாழ்ந்துவந்துள்ளார் லக்‌ஷ்மி. ஆனால், இரண்டாண்டுகளுக்கு முன்னதாக பிரவாணி பிறந்துள்ளார். அதுவும் பெண் குழந்தையாகப் பிறக்க, பிரசாத்தின் கொடூரம் இன்னும் உச்சம் தொட்டுள்ளது. பிரசாத்திடமிருந்து தன்னையும் தனது சின்னஞ்சிறு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வதே லக்‌ஷ்மிக்கு பெரும் பாடாக இருந்துள்ளது. அக்கம்பக்கத்தினருக்கும் பிரசாத்தின் கொடுமையைத் தட்டிக்கேட்கத் தவறிவிட்டனர். அவ்வப்போது சில பெண்கள் மட்டும் லக்‌ஷ்மிக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.  இந்நிலையில்தான், அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நேற்று கூலி வேலைக்குச் சென்று திரும்பிய பிரசாத் வழக்கம்போல் வீடு திரும்பியதுமே லக்‌ஷ்மியுடன் சண்டையைத் தொடங்கிவிட்டான். வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மகளை தூக்கி குழந்தையின் தலையை சுவரில் மோதவைத்துள்ளான். அப்போதும் அவனது ஆக்ரோஷம் தீரவில்லை மூத்த மகள் ஸ்ரீயையும் அதே பாணியில் அடித்துள்ளான். அதிர்ந்துபோன தாய் லக்‌ஷ்மி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவர்கள் உதவினர். குழந்தை பிரவாணி இறந்துவிட ஸ்ரீ சிகிச்சையில் உள்ளது. இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரசாத்தைப் பிடிக்கும் வேட்டையில் இறங்கியுள்ளனர். 

கணவனின் மீது மனைவி லக்‌ஷ்மிதான் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை லக்‌ஷ்மி 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரசாத் வன்முறையைத் தொடங்கிய நாளிலேயே கொடுத்திருந்தால் இன்று இந்த நிலையில் இருந்திருக்கமாட்டார். பெண்கள் குடும்ப வன்முறையைப் பொறுக்க பொறுக்க இதுபோன்ற கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். லக்‌ஷ்மியின் பொறுப்பற்ற பொறுமை பிஞ்சுக் குழந்தையின் உயிரையும் பறித்துள்ளது. குடும்ப வன்முறை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கும் வித்திட்டுள்ளது.

குறிப்பு : சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 91502-50665 என்றபிரத்யேக செல்போன் எண் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, சென்னை ஆயிரம் விளக்கில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரும் இதில், இணைந்து செயல்படுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்
ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 24-ம் தேதி(24.06.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 24-ம் தேதி(24.06.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Skoda Kodiaq RS: அறிமுகத்திற்கு முன்னரே சம்பவம் செய்த ஸ்கோடா கோடியாக் RS.! 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
அறிமுகத்திற்கு முன்னரே சம்பவம் செய்த ஸ்கோடா கோடியாக் RS.! 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
Embed widget