மேலும் அறிய

Female Infanticide | பெண்ணாய் பிறந்ததால், பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக்கொலை : கொடூரனை தேடும் காவல்துறை..!

ஆந்திர மாநிலம் விஜியநகரம் மாவட்டம் ஜோதிமமிடிவாலசா எனும் கிராமத்தைச் சேர்ந்தவன் பிரசாத். இவனுடைய மனைவி லக்‌ஷ்மி. இவர்களுக்கு ஸ்ரீ, பிரவாணி என்று இரண்டு பெண் குழந்தைகள்.

அரக்கத்தனம் என்றால் அது இதுதானோ, அவன் இவன்தானோ என்றெண்ணும் அளவுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன் தான் பெற்ற பிள்ளையையே சுவரில் தலையை மோதவைத்துக் கொன்றிருக்கிறான். ஆந்திர மாநிலம் விஜியநகரம் மாவட்டம் ஜோதிமமிடிவாலசா எனும் கிராமத்தைச் சேர்ந்தவன் பிரசாத். இவனுடைய மனைவி லக்‌ஷ்மி. இவர்களுக்கு ஸ்ரீ, பிரவாணி என்று இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

முதல் குழந்தை பிறந்த நாளிலிருந்தே லக்‌ஷ்மியுடன் சண்டை சச்சரவு என்றே பிரசாத் இருந்துள்ளான். பெண் பிள்ளை பிறந்ததுதான் அதற்குக் காரணம். இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்கும் எல்லாம் சரியாகிவிடும் என்றே வன்முறையை சகித்துக் கொண்டு வாழ்ந்துவந்துள்ளார் லக்‌ஷ்மி. ஆனால், இரண்டாண்டுகளுக்கு முன்னதாக பிரவாணி பிறந்துள்ளார். அதுவும் பெண் குழந்தையாகப் பிறக்க, பிரசாத்தின் கொடூரம் இன்னும் உச்சம் தொட்டுள்ளது. பிரசாத்திடமிருந்து தன்னையும் தனது சின்னஞ்சிறு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வதே லக்‌ஷ்மிக்கு பெரும் பாடாக இருந்துள்ளது. அக்கம்பக்கத்தினருக்கும் பிரசாத்தின் கொடுமையைத் தட்டிக்கேட்கத் தவறிவிட்டனர். அவ்வப்போது சில பெண்கள் மட்டும் லக்‌ஷ்மிக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.  இந்நிலையில்தான், அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நேற்று கூலி வேலைக்குச் சென்று திரும்பிய பிரசாத் வழக்கம்போல் வீடு திரும்பியதுமே லக்‌ஷ்மியுடன் சண்டையைத் தொடங்கிவிட்டான். வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மகளை தூக்கி குழந்தையின் தலையை சுவரில் மோதவைத்துள்ளான். அப்போதும் அவனது ஆக்ரோஷம் தீரவில்லை மூத்த மகள் ஸ்ரீயையும் அதே பாணியில் அடித்துள்ளான். அதிர்ந்துபோன தாய் லக்‌ஷ்மி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவர்கள் உதவினர். குழந்தை பிரவாணி இறந்துவிட ஸ்ரீ சிகிச்சையில் உள்ளது. இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரசாத்தைப் பிடிக்கும் வேட்டையில் இறங்கியுள்ளனர். 

கணவனின் மீது மனைவி லக்‌ஷ்மிதான் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை லக்‌ஷ்மி 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரசாத் வன்முறையைத் தொடங்கிய நாளிலேயே கொடுத்திருந்தால் இன்று இந்த நிலையில் இருந்திருக்கமாட்டார். பெண்கள் குடும்ப வன்முறையைப் பொறுக்க பொறுக்க இதுபோன்ற கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். லக்‌ஷ்மியின் பொறுப்பற்ற பொறுமை பிஞ்சுக் குழந்தையின் உயிரையும் பறித்துள்ளது. குடும்ப வன்முறை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கும் வித்திட்டுள்ளது.

குறிப்பு : சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 91502-50665 என்றபிரத்யேக செல்போன் எண் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, சென்னை ஆயிரம் விளக்கில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரும் இதில், இணைந்து செயல்படுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget