மேலும் அறிய

புகார் அளிக்க வந்த வேறு ஒருவரின் காதலியை, தனது காதல் வலையில் சிக்க வைத்த உதவி காவல் ஆய்வாளர் - ஆயுதப்படைக்கு மாற்றம்

மயிலாடுதுறை அருகே புகார் அளிக்க வந்த வேறு ஒருவரின் காதலியை, தனது காதல் வலையில் சிக்க வைத்த உதவி காவல் ஆய்வாளர் ஆய்தப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலி வேறொருவரைத் திருமணம் செய்யவிருப்பதாகவும், வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மிரட்டியதாகவும் கூறி, தொலைபேசியில் பெற்றோரிடம் தெரிவித்த சில மணிநேரங்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் கதை: தொடங்கியது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் என்பவரின் ஒரே மகன் 30 வயதான சரத்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளாக குவைத் நாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள திருப்பன்கூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை சரத்குமார் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரத்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்ததால், அடிக்கடி சங்கீதாவுக்கு ரொக்கப் பணம் மற்றும் நகைகளை அனுப்பியுள்ளார். இதுவரை 15 சவரன் நகைகள் மற்றும் சுமார் இரண்டு லட்ச ரூபாய் வரை ரொக்கப் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளும் நம்பிக்கையில் இந்த உறவு நீடித்துள்ளது.

சம்பவத்தின் திருப்புமுனை: உதவி ஆய்வாளரின் தலையீடு

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சங்கீதாவின் இருசக்கர வாகனம் தொலைந்த நிலையில், இதுகுறித்து புகார் அளிக்க வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சங்கீதாவும் உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தியும் வெளிநாட்டில் இருந்த சரத்குமாருக்கு வீடியோ கால் செய்துள்ளனர். அப்போது, "நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம், எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே" என்று கூறியுள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி, சரத்குமாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சரத்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சோகமான முடிவு

நேற்றுமுன்தினம் இரவு, சரத்குமார் தனது பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, சங்கீதா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இனி உயிர் வாழ விருப்பமில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார். அதற்குப் பிறகு அவரது தொலைபேசியை அணைத்து வைத்துள்ளார். பெற்றோர்கள் தொடர்ந்து தொடர்புகொள்ள முயன்றபோது, அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், குவைத்தில் உள்ள சரத்குமாரின் நண்பர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நண்பர்கள், சரத்குமார் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்தச் செய்தி சரத்குமாரின் குடும்பத்தினரைத் துயரத்தில் ஆழ்த்தியது.

உறவினர்களின் போராட்டம் 

சம்பவத்தைக் கேள்விப்பட்ட சரத்குமாரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், சரத்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் புகார் மனு அளித்தனர். மேலும், குவைத்தில் உள்ள சரத்குமாரின் உடலை உடனடியாக இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ஆயுதப்படைக்கு மாற்று

இந்நிலையில் முதற்கட்டமாக குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை உதவி ஆய்வாளர் சூரிய மூர்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget