மேலும் அறிய

மயிலாடுதுறை கோயிலில் இருசக்கர வாகன திருடன் கைது! 5 பைக்குகள் மீட்பு: அதிர்ச்சியில் பக்தர்கள்!

மயிலாடுதுறையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 5 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு வந்த பக்தரின் இருசக்கர வாகனத்தைத் திருடிய நபரை, மயிலாடுதுறை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கைது செய்தனர். அவரிடமிருந்து திருட்டுப் போன ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் குற்றவாளியைப் பிடித்த மயிலாடுதுறை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அவரது குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வெகுவாகப் பாராட்டினார்.

தொடரும் வாகன திருட்டுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் காணமால் போவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் காவல்நிலையத்தில் பதிவாகி வருகின்றனர். இதனை அடுத்து இருசக்கர வாகனங்கள் காணமால் போகும் இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்று வாகன திருட்டு சம்பவங்கள் தொடராத வண்ணம் நடவடிக்கைகளும்  மேற்கொண்டுள்ளனர்.

கோயில் வாசலில் அரங்கேறிய திருட்டு 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் 25 வயதான சுமன் சங்கர். இவர் கடந்த ஆகஸ்ட் 23, 2025 அன்று மாலை மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய தனது TVS Scooty Pep (TN 82 F 9025) என்ற இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஆலயத்தின் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, தரிசனம் முடித்து திரும்பி வந்தபோது, தனது இருசக்கர வாகனம் அங்கு இல்லை, வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையின் விரைவான நடவடிக்கை

வாகனம் திருட்டு சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதும், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, திருட்டுச் சம்பவம் குறித்து பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கடலூர் மாவட்டம், குமராட்சி, தெற்கு மாங்குடி கத்திரிமேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 55 வயதான செல்வம் என்பது தெரிய வந்தது.

குற்றவாளி கைது: ஐந்து வாகனங்கள் மீட்பு

இதனை அடுத்து காவல்துறையினர், திருட்டில் ஈடுபட்ட செல்வம் என்பவரை உடனடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து முதலில் காணாமல் போன TVS Scooty Pep வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணையின்போது, அவரிடம் இருந்து கூடுதலாக நான்கு TVS XL ரக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட செல்வம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீசாரை பாராட்டிய எஸ்பி

வழக்கின் விசாரணை மற்றும் குற்றவாளியைக் கைது செய்ததில் சிறப்பாகச் செயல்பட்ட மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அவரது குழுவினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின், வெகுவாகப் பாராட்டினார். பொதுமக்கள் தங்கள் வாகனங்களை முறையாகப் பூட்டி பாதுகாப்பாக வைக்குமாறும், சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget