மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: இட்லி கடை நடத்தி வந்த பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்.. மதுரையில் பரபரப்பு..
மதுரையில் பிரபல ரவுடி வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: இட்லி கடை நடத்தி வந்த பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்.. மதுரையில் பரபரப்பு.. A gun seized from the house of a famous raider who ran an Italian shop in Madurai Police investigation Crime: இட்லி கடை நடத்தி வந்த பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்.. மதுரையில் பரபரப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/4ae281fea7866ef2bc626e43c77cb4a51672595542272184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
துப்பாக்கி
மதுரை திலகர்திடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியாக பார்க்கப்படும் நபர் தான் அலெக்ஸ். இவர் மீது மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் அலெக்ஸ் தற்போது இட்லிகடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக திலகர்திடல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளளது. இதனையடுத்து தகவலின் அடிப்படையில் பிரபல ரவுடியான அலெக்ஸ் வீட்டிற்குள் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
![Crime: இட்லி கடை நடத்தி வந்த பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்.. மதுரையில் பரபரப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/11/1416159aca9717c2801733d297095b3c1665452446420102_original.jpg)
அப்போது வீட்டில் அறை ஒன்றில் துப்பாக்கி ஒன்று பதுக்கிவைத்திருப்பதை கண்டுபிடித்த கரிமேடு காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அலெக்ஸ் வீட்டில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஏர்கன் வகை துப்பாக்கி என தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிக்கான அனுமதி பெற்றுள்ளாரா? வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தினாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் பிரபல ரவுடி வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - pugar petti: பஸ் வசதி இல்லை; எட்டாக் கனியாக மாறும் பெண் கல்வி, சிவகங்கை மாவட்டத்தின் அவல நிலை
மேலும் செய்திகள் படிக்க - ‘பொங்கல் தொகுப்பு ரூ.5 ஆயிரம் என எதிர்க்கட்சிக்கு முதலில் கூறியது நான் தான்’ - ஓபிஎஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion