மேலும் அறிய

கற்கள்.. கம்புகள்.. உத்தரப் பிரதேசத்தில் சிறுத்தையை கொன்ற 64 பேர் மீது வழக்கு

கடந்த 27ஆம் தேதியன்று 3 வயதான அந்த பெண் சிறுத்தை கிராமத்திற்குள் வந்துள்ளது. அப்போது அந்த சிறுத்தையை சுற்றி வளைத்த கிராம மக்கள் அதை அடித்தே கொலை செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுத்தையை கொலை செய்ததாக 64 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பெண்களும் அடங்குவர். 

உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில் உள்ளது கட்டார்னியாகட் என்ற வனவிலங்குகள் சரணாலயம். இந்த சரணாலயத்தை சுற்றியும் அதனுள்ளேயும் கூட சில கிராமங்கள் உள்ளன. இதில் குறிப்பாக கதோடியா என்ற கிராமத்தில் புகுந்த சிறுத்தை 13 பேரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் 3 பேர் பெண்கள். காயமடைந்தவர்களில் சில வன அலுவலர்களும் உண்டு. மற்றபடி கிராமவாசிகள் அனைவருமே வயலில் வேலை செய்யும்போதோ அல்லது கால்நடை மேய்க்கச் செல்லும்போதோ தாக்குதலுக்க்கு உள்ளாகி உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதியன்று 3 வயதான அந்த பெண் சிறுத்தை கிராமத்திற்குள் வந்துள்ளது. அப்போது அந்த சிறுத்தையை சுற்றி வளைத்த கிராம மக்கள் அதை அடித்தே கொலை செய்துள்ளனர்.


கற்கள்.. கம்புகள்.. உத்தரப் பிரதேசத்தில் சிறுத்தையை கொன்ற 64 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வட்டார வன அலுவலர் அகாஷ்தீப் பதாவன் கூறுகையில், 3 வயது பெண் சிறுத்தையை அடித்துக் கொன்றதாக 10 பெண்கள் உள்பட 64 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும், கிரிமினல் சட்டத் திருத்தம் 7ன் கீழ் குழப்பத்தை விளைவித்தல், அரசு ஊழியர்களை தாக்குதல், அரசு நடவடிக்கைகளை முடக்குதல் உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுத்தையைப் பிடிக்க ஆங்காங்கே வலைகள் விரிக்கப்பட்டிருந்த நிலையில் அது எதிர்பாராத பாதை வழியாக கிராமத்துக்குள் வந்துள்ளது. புதன் கிழமை அதிகாலை கிராமத்துக்குள் சிறுத்தை வர அதனை கிராமவாசிகள் அடித்துக் கொன்றுள்ளனர்.

விலங்கு மனித மோதல் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வன அழிப்பே இதற்கு முக்கியக் காரணம் என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மக்களோ ஆண்டாண்டு காலமாக தாங்கள் வசிக்கும் நிலத்தை விட்டுவிட்டு எப்படி வெளியேற முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

வடக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள கானகங்களை ஒட்டிய கிராமங்களில் இவ்வாறான மனித விலங்கு மோதல் அதிகமாகவே இருக்கின்றன. கடந்த 202ஒல் கூட வடக்கே ஒரு சிறுத்தையைக் கொன்று ஊர் மக்கள் அனைவருமே அதனை ஊர்வலமாகக் கொண்டு சென்றது அனைவரையும் பதற வைத்தது. 

இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் இணைந்து மூன்று வயது சிறுத்தையை கல்லாலும் கம்பாலும் அடித்தே கொலை செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget