மேலும் அறிய

60 லட்சம் மோசடி செய்து தலைமறைவான நிதிநிறுவன அதிபர்...!’தப்பி ஓட முயன்றபோது எகிரி பிடித்த போலீஸ்’...!

திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 60 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சிவக்குமார் தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெலாக்குப்பத்தை சேர்ந்த சம்பந்தம் என்பவரின் மகன் சிவா என்கிற சிவக்குமார் (45) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டிவனம்- செஞ்சி சாலையில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் எங்கள் நிதி நிறுவனத்தில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டினால் கூடுதலாக வட்டி தொகை தருவதாகவும், பல பரிசுப் பொருட்களை தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பி பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிதி நிறுவனத்தில் மாதம்தோறும் சந்தா பணம் செலுத்தி வந்துள்ளனர் பணத்தைப் பெற்ற சிவக்குமார் அதனை உரியவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு சென்று பண மோசடி செய்ததாக புகார் தந்ததன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.


60 லட்சம் மோசடி செய்து தலைமறைவான நிதிநிறுவன அதிபர்...!’தப்பி ஓட முயன்றபோது எகிரி பிடித்த போலீஸ்’...!

 

குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் சிவக்குமார் 30க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 60 லட்சம் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தாலும், சிவகுமார் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளார், இந்த நிலையில் திண்டிவனத்திலிருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற சிவக்குமாரை, ஆய்வாளர் ரேணுகா தேவி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் மடக்கிய நிலையில் தப்பிக்க முயன்ற சிவக்குமாரை காவலர்கள் எகிறி பிடித்து கையை பின் பக்கமாக கட்டியவாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிவக்குமாரை சிறையில் அடைத்துள்ளனர்.


60 லட்சம் மோசடி செய்து தலைமறைவான நிதிநிறுவன அதிபர்...!’தப்பி ஓட முயன்றபோது எகிரி பிடித்த போலீஸ்’...!

 

பொதுமக்கள் எந்த ஒரு நிறுவனத்திடம் பணம் செலுத்தும் பொழுது கவனத்துடனும் மேலும் அந்த நிறுவனங்களின் முழுவிவரத்தையும் அறிந்த பின்னர் பணத்தை செலுத்த வேண்டும் அடையாளம் தெரியாதவர்கள் ஆசை வார்த்தைகள் கூறி இலவசங்களை அள்ளி தெளிப்பார்கள், இதில் மயங்கி பொதுமக்கள் பணத்தை கட்டிவிட்டு ஏமாற்றிய பிறகு காவல் நிலையத்தில் வந்து புகார் தெரிவிப்பது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற மோசடி கும்பல்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் மோசடி செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

சுவரை உடைக்க சத்து இல்லாமல் பாதியில் சென்ற திருடர்கள்; வங்கி லாக்கர் தப்பியது!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் தொடரும் மரணக் குழிகள்: 18 ஆண்டுகாலமாக அச்சத்தில் பயணிக்கும் மக்கள்..
மயிலாடுதுறையில் தொடரும் மரணக் குழிகள்: 18 ஆண்டுகாலமாக அச்சத்தில் பயணிக்கும் மக்கள்..
ரூ. 60 லட்சம் அரசு நிதி முறைகேடா? சீர்காழி உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் வரவு - செலவு கணக்கு விவரம் இதோ!
ரூ. 60 லட்சம் அரசு நிதி முறைகேடா? சீர்காழி உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் வரவு - செலவு கணக்கு விவரம் இதோ!
மக்கள் வரிப்பணத்தில் கட்டிவிட்டு இடிப்பதா? மருத்துவமனைக்காக மல்லுக்கட்டிய கிராம மக்கள் - கைது செய்த காவல்துறை..
மக்கள் வரிப்பணத்தில் கட்டிவிட்டு இடிப்பதா? மருத்துவமனைக்காக மல்லுக்கட்டிய கிராம மக்கள் - கைது செய்த காவல்துறை..
ஆசை வார்த்தை கூறி பெண்கள் இளம் வேலைக்கு தேர்வு !! போதை பொருட்கள் கொடுத்து பாலியல் தொழில்
ஆசை வார்த்தை கூறி பெண்கள் இளம் வேலைக்கு தேர்வு !! போதை பொருட்கள் கொடுத்து பாலியல் தொழில்
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu Death: முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடைபெற்றார் தோழர் நல்லகண்ணு!
Nallakannu Death: முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடைபெற்றார் தோழர் நல்லகண்ணு!
Nallakannu: ’’சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி’’ தோழர் நல்லகண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!
Nallakannu: ’’சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி’’ தோழர் நல்லகண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!
Nallakannu History: கடைசி வரை எளிமை.. குணம் மாறாத தலைவன்.. நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு!
Nallakannu History: கடைசி வரை எளிமை.. குணம் மாறாத தலைவன்.. நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு!
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை.! தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து கழகம் அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை.! தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து கழகம் அறிவிப்பு
DMK vs Congress: ரெட்டை குதிரையில் சவாரி செய்யும் காங்.; ஒரு பக்கம் திமுக..சைடு கேப்பில் தவெக - திட்டம் பலிக்குமா.?
ரெட்டை குதிரையில் சவாரி செய்யும் காங்.; ஒரு பக்கம் திமுக..சைடு கேப்பில் தவெக - திட்டம் பலிக்குமா.?
CM Stalin Vs ADMK-BJP: ''பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான், ராஜ்ஜியம் கிடைக்காது“; அதிமுக-பாஜக-வை வெளுத்த ஸ்டாலின்
''பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான், ராஜ்ஜியம் கிடைக்காது“; அதிமுக-பாஜக-வை வெளுத்த ஸ்டாலின்
Embed widget