மேலும் அறிய

60 லட்சம் மோசடி செய்து தலைமறைவான நிதிநிறுவன அதிபர்...!’தப்பி ஓட முயன்றபோது எகிரி பிடித்த போலீஸ்’...!

திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 60 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சிவக்குமார் தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெலாக்குப்பத்தை சேர்ந்த சம்பந்தம் என்பவரின் மகன் சிவா என்கிற சிவக்குமார் (45) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டிவனம்- செஞ்சி சாலையில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் எங்கள் நிதி நிறுவனத்தில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டினால் கூடுதலாக வட்டி தொகை தருவதாகவும், பல பரிசுப் பொருட்களை தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பி பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிதி நிறுவனத்தில் மாதம்தோறும் சந்தா பணம் செலுத்தி வந்துள்ளனர் பணத்தைப் பெற்ற சிவக்குமார் அதனை உரியவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு சென்று பண மோசடி செய்ததாக புகார் தந்ததன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.


60 லட்சம் மோசடி செய்து தலைமறைவான நிதிநிறுவன அதிபர்...!’தப்பி ஓட முயன்றபோது எகிரி பிடித்த போலீஸ்’...!

 

குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் சிவக்குமார் 30க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 60 லட்சம் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தாலும், சிவகுமார் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளார், இந்த நிலையில் திண்டிவனத்திலிருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற சிவக்குமாரை, ஆய்வாளர் ரேணுகா தேவி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் மடக்கிய நிலையில் தப்பிக்க முயன்ற சிவக்குமாரை காவலர்கள் எகிறி பிடித்து கையை பின் பக்கமாக கட்டியவாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிவக்குமாரை சிறையில் அடைத்துள்ளனர்.


60 லட்சம் மோசடி செய்து தலைமறைவான நிதிநிறுவன அதிபர்...!’தப்பி ஓட முயன்றபோது எகிரி பிடித்த போலீஸ்’...!

 

பொதுமக்கள் எந்த ஒரு நிறுவனத்திடம் பணம் செலுத்தும் பொழுது கவனத்துடனும் மேலும் அந்த நிறுவனங்களின் முழுவிவரத்தையும் அறிந்த பின்னர் பணத்தை செலுத்த வேண்டும் அடையாளம் தெரியாதவர்கள் ஆசை வார்த்தைகள் கூறி இலவசங்களை அள்ளி தெளிப்பார்கள், இதில் மயங்கி பொதுமக்கள் பணத்தை கட்டிவிட்டு ஏமாற்றிய பிறகு காவல் நிலையத்தில் வந்து புகார் தெரிவிப்பது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற மோசடி கும்பல்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் மோசடி செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

சுவரை உடைக்க சத்து இல்லாமல் பாதியில் சென்ற திருடர்கள்; வங்கி லாக்கர் தப்பியது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.