மேலும் அறிய

Punjab National bank Fraud case: வங்கிக்கு அல்வா கொடுத்த மோசடியாளர்கள்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை..!

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட, வங்கி மோசடி வழக்கில் ஈடுபட்ட மோசடியாளர்களுக்கு, தற்போது கடுங்காவல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட, வங்கி மோசடி வழக்கில் ஈடுபட்ட மோசடியாளர்களுக்கு, தற்போது கடுங்காவல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2004-ம் ஆண்டு, பிரபலமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, ஏமாற்றி, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக , சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.  இந்த மோசடியானது, 1997-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரையிலான  காலக்கட்டத்தில், திட்டமிட்டு சதி செய்து, வங்கியை ஏமாற்றி நடைபெற்றுள்ளது. அதுவும், அந்தக் காலக்கட்டத்தில், 2 கோடியே 60 லட்சம் ரூபாய் வங்கிக்கு இழப்பு ஏற்படும் வகையில் மோசடி நடைபெற்றுள்ளது. 

போலி பில்கள், போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியை ஏமாற்றி, கோடிகளை அபேஸ் செய்துள்ளனர். இதுதொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிபிஐ-யின் பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில், 2004-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


Punjab National bank Fraud case: வங்கிக்கு அல்வா கொடுத்த மோசடியாளர்கள்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை..!

அதில், ஜாபருல்லா முதன்மை குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டார். அவருடன், ஹாஜி முகம்மது, தமிழ்ச்செல்வன், ரத்தினகுமார், விஜயகுமார் ஆகிய 4 பேரும் மீதும் மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டது. பிறகு, பல ஆண்டுகள் நடைபெற்ற தொடர் விசாரணையில்,  போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்து, 2 கோடியே 60 லட்சம் மதிப்பிற்கு வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 5 பேருக்கு எதிராக சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  பல்வேறு காரணங்கள் மற்றும் தொடர் விசாரணையின் காரணமாக, நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த 31-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. 


Punjab National bank Fraud case: வங்கிக்கு அல்வா கொடுத்த மோசடியாளர்கள்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை..!

சென்னைப் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதின்றத்தில், நீதிபதி கிரிஜா ராணி தீர்ப்பு வழங்கினார்.  இதன்படி, குற்றவாளிகள் ஐந்து பேரில் நான்கு பேருக்கு தலா ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும்  ஒவ்வொருவரும் தலா ரூ.25,000 அபராதம் செலுத்தவேண்டும் என்றும் தவறினால்  ஆறு மாத கடுங்காவல் தண்டனையை கூடுதலாக  அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தத்தீர்ப்பு குறித்த தகவலை, சென்னையில் உள்ள சிபிஐ- பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக இந்த வழக்கு அப்போது பேசப்பட்டது. ஆனால் அதன்பின் அடுத்தடுத்த நிகழ்வுகள் மற்றும் காலவோட்டத்தில் இந்த வழக்கையே பொதுமக்களும் ஊடகங்களும் மறந்துவிட்டன. ஆனால், சத்தமில்லாமல் நீண்ட காலமாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில், வெற்றிகரமாக குற்றத்தை நிருபித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது சிபிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Embed widget