மேலும் அறிய

Punjab National bank Fraud case: வங்கிக்கு அல்வா கொடுத்த மோசடியாளர்கள்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை..!

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட, வங்கி மோசடி வழக்கில் ஈடுபட்ட மோசடியாளர்களுக்கு, தற்போது கடுங்காவல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட, வங்கி மோசடி வழக்கில் ஈடுபட்ட மோசடியாளர்களுக்கு, தற்போது கடுங்காவல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2004-ம் ஆண்டு, பிரபலமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, ஏமாற்றி, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக , சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.  இந்த மோசடியானது, 1997-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரையிலான  காலக்கட்டத்தில், திட்டமிட்டு சதி செய்து, வங்கியை ஏமாற்றி நடைபெற்றுள்ளது. அதுவும், அந்தக் காலக்கட்டத்தில், 2 கோடியே 60 லட்சம் ரூபாய் வங்கிக்கு இழப்பு ஏற்படும் வகையில் மோசடி நடைபெற்றுள்ளது. 

போலி பில்கள், போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியை ஏமாற்றி, கோடிகளை அபேஸ் செய்துள்ளனர். இதுதொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிபிஐ-யின் பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில், 2004-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


Punjab National bank Fraud case: வங்கிக்கு அல்வா கொடுத்த மோசடியாளர்கள்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை..!

அதில், ஜாபருல்லா முதன்மை குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டார். அவருடன், ஹாஜி முகம்மது, தமிழ்ச்செல்வன், ரத்தினகுமார், விஜயகுமார் ஆகிய 4 பேரும் மீதும் மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டது. பிறகு, பல ஆண்டுகள் நடைபெற்ற தொடர் விசாரணையில்,  போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்து, 2 கோடியே 60 லட்சம் மதிப்பிற்கு வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 5 பேருக்கு எதிராக சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  பல்வேறு காரணங்கள் மற்றும் தொடர் விசாரணையின் காரணமாக, நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த 31-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. 


Punjab National bank Fraud case: வங்கிக்கு அல்வா கொடுத்த மோசடியாளர்கள்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை..!

சென்னைப் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதின்றத்தில், நீதிபதி கிரிஜா ராணி தீர்ப்பு வழங்கினார்.  இதன்படி, குற்றவாளிகள் ஐந்து பேரில் நான்கு பேருக்கு தலா ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும்  ஒவ்வொருவரும் தலா ரூ.25,000 அபராதம் செலுத்தவேண்டும் என்றும் தவறினால்  ஆறு மாத கடுங்காவல் தண்டனையை கூடுதலாக  அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தத்தீர்ப்பு குறித்த தகவலை, சென்னையில் உள்ள சிபிஐ- பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக இந்த வழக்கு அப்போது பேசப்பட்டது. ஆனால் அதன்பின் அடுத்தடுத்த நிகழ்வுகள் மற்றும் காலவோட்டத்தில் இந்த வழக்கையே பொதுமக்களும் ஊடகங்களும் மறந்துவிட்டன. ஆனால், சத்தமில்லாமல் நீண்ட காலமாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில், வெற்றிகரமாக குற்றத்தை நிருபித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது சிபிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது
சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
Edappadi Palanisamy: “திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
“திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TN Exit Polls 2026: அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
"QR கோட் இல்லையா? நோ என்ட்ரி!" – வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி வேலி
Embed widget