மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருப்பத்தூர் : 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் தாலி : போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு..!
14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி, நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தல், மானபங்கப்படுத்துதல், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், சிறுமியின் தாயை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு
![திருப்பத்தூர் : 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் தாலி : போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு..! 26 year old construction forcefully ties sacred thread around 14 year old school girl neck . திருப்பத்தூர் : 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் தாலி : போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/14aa422db1d27b05cfd68e63f2efa4d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குற்றவாளி விக்னேஷ்
வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்குக் கட்டாய தாலி கட்டிய இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு அணைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியைப் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி, காமராஜ் நகர்ப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் (26) இவர் பெங்களூரில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
![திருப்பத்தூர் : 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் தாலி : போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/51f700d1ed05ca3fc88389f8a64de610_original.jpg)
இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்து தாயுடன் வசித்துவரும் உறவினரின் மகள் (9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ) 14 வயது சிறுமியிடம் கடந்த 2 ஆண்டுகளாகப் பேசி வந்ததாக கூறப்படுகிறது . நாள் போக்கில், 14 வயது மாணவியை காதலிப்பதாக வரது தாயிடம் தெரிவித்த விக்னேஷ், சிறுமியைத் திருமணம் செய்து தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார் , அதற்கு மாணவியின் தாயார் திருமணம் செய்து தரமுடியாது, 18 வயது பூர்த்தியான பின்னர் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் விடுமுறையில் பெங்களூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ள இளைஞர் விக்னேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு , அந்த சிறுமியின் தாய் பாக்கத்து வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில், கையில் தாலியுடன் நுழைந்து சிறுமிக்கு வலுக்கட்டாயமாகக் கழுத்தில் தாலி கட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது
![திருப்பத்தூர் : 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் தாலி : போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/14aa422db1d27b05cfd68e63f2efa4d5_original.jpg)
என்ன செய்வது என்று அறியாமல் பயந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம்கேட்டு வந்த சிறுமியின் தாய் மகளுக்கு நேர்ந்த சம்பவத்தை நினைத்து மன உளைச்சல் ஏற்பட்டு வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் இளைஞர் மீது 14 சிறுமிக்குக் கட்டாய தாலி கட்டியது, சிறுமியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தது,பெண்ணை மானபங்கப்படுத்தியது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, சிறுமியின் தாயை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்
வாணியம்பாடி அருகே வீட்டிற்குள் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்குக் கட்டாய தாலி கட்டிய இளைஞரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion