மேலும் அறிய

திருச்சியில் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

திருச்சி மாவட்டத்தில் கார் கண்ணாடியை உடைத்து நகை-பணம் இருந்த பை திருட்டுபோனது. திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.

பெங்களூரு ஜலதர்சினி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம் வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்தார். குணசீலத்தில் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் அருகில் இருந்த காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி, தனிப்பிரிவு போலீஸ்காரர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைப்பையில் 4 விலை உயர்ந்த செல்போன்கள், நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் திருட்டுபோன செல்போனில் டிராக்கிங் டிவைஸ் செல்போன் செயலி உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த செயலியை பயன்படுத்திய போலீசார் திருட்டுபோன செல்போன் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதை கண்டுபிடித்தனர். அப்பகுதியில் போலீசார் சென்று பார்த்தபோது, காரில் இருந்து திருடப்பட்ட கைப்பை வாத்தலை காத்தான்கோவில் சுற்றுச்சுவர் அருகே கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை கைப்பற்றிய போலீசார் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அதில் செல்போன், நகை மற்றும் பணம் ஆகியவை இருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்த சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். 


திருச்சியில் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட  2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

மேலும் திருச்சி மாநகரில் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முதலியார் சத்திரத்தை சேர்ந்த ஆரோக்கியசெல்வகுமார் (20), காஜாபேட்டை பசுமரத்தை சேர்ந்த ஆரிப்கான் (19) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget