மேலும் அறிய

மும்பையில் முதலாம் ஆண்டு ஐஐடி மாணவர் ஹாஸ்டல் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை! - காரணம் என்ன?

ஐஐடி மும்பையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐஐடி மும்பையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதான அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை மதியம் விடுதியின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போவாய் போலீசார் தெரிவித்தனர், அதன்பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்ற மாணவர் மூன்றரை மாதங்களுக்கு முன்பு ஐஐடி பாம்பேயில் சேர்ந்தார் என்றும் பிடெக் மாணவர் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 “ஹாஸ்டல் கட்டிடத்தின் புகலிடப் பகுதியில் இருந்து சோலங்கி குதித்ததை நேரில் பார்த்தவர்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவரது அறை தோழர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறோம், அதற்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறோம், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறிய நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர், “இந்த நிறுவனம் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கிறது” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், நிறுவன இயக்குனர் சுபாசிஸ் சவுத்ரி அனைத்து மாணவர்களுக்கும் இந்த செய்தியை மெயிலில் பகிர்ந்து கொண்டார். “இன்று பிற்பகல் நடந்த சோகமான சம்பவத்தில் முதலாம் ஆண்டு மாணவர் மரணமடைந்ததை தெரிவிக்க வருந்துகிறோம். இதுகுறித்து போவாய் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மாணவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை குடும்பத்தினர் பெற பிரார்த்திக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோலங்கி கெமிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்தார். அவர் ஹாஸ்டல் 16 இல் வசிப்பவர் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதனால் கல்வி சார்ந்த அழுத்தம் இதற்குக் காரணம் என்று வளாகத்தில் உள்ள பலர் சந்தேகித்து வருகின்றனர். இருப்பினும், மேலும் விவரங்கள் வெளிவருவதற்கு முன்பு ஊகிப்பது பொருத்தமாக இருக்காது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

வளாகத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு மாணவர், “எந்த குறிப்பும் இல்லாததால், அவர் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் குறித்து தெளிவு இல்லை. செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அது மட்டும் ஒரு காரணம் என்று சொல்வது சரியாக இருக்காது. இன்ஸ்டிடியூட்டில் இருந்து மேலும் தகவல் அறிய நாங்கள் காத்திருப்போம்” என்றார்.

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget