மேலும் அறிய

வேறொருவருடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த 22 வயது காதலி: ஆத்திரத்தில் 19 வயது இளைஞர் செய்த கொடூரம்!

அவரது பெற்றோர் ரச்சனாவுக்கு வேறொரு நபருடன் திருமணத்தை நிச்சயம் செயதுள்ளனர். அந்த திருமணத்திற்கு தன்னை காதலித்த ரச்சனாவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்ததற்காக காதலி குடும்பத்தை கத்தியால் தாக்கி, சகோதரனை துப்பாக்கியால் சுட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 30) அன்று 19 வயது இளைஞர் ஒருவர் காதலியின் சகோதரனை கொன்று, அவரது குடும்ப உறுப்பினர்களைக் காயப்படுத்தி உள்ளார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் காதல் தோல்வியால் ஏற்பட்டிருக்கிறது என்று மூத்த காவல் துறை ஆய்வாளர் தினேஷ் பிரபு தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட ரிங்கு கங்வார், உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்த்தை சேர்ந்தவர் ஆவார். 22 வயதாகும் ரச்சனா கங்வார் அவருடன் காதல் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ரச்சனாவும் ரிங்குவும் சில நாட்களாகவே காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு அவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவிப்பதாக தெரியவில்லை.

வேறொருவருடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த 22 வயது காதலி: ஆத்திரத்தில் 19 வயது இளைஞர் செய்த கொடூரம்!

இவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் இசையவில்லை. இதன் காரணமாக அவரது பெற்றோர் ரச்சனாவுக்கு வேறொரு நபருடன் திருமணத்தை நிச்சயம் செயதுள்ளனர். அந்த திருமணத்திற்கு தன்னை காதலித்த ரச்சனாவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. அதனை அறிந்த ரிங்கு கடும் ஆத்திரம் கொண்டுள்ளார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபமடைந்த ரிங்கு, காலை வேளையில் சிர்சா கிராமத்தில் உள்ள ரச்சனாவின் வீட்டிற்குள் புகுந்து, அவரையும் அவரது 50 வயது தாயார் மாயாதேவியையும் கத்தியால் தாக்கி உள்ளார். ரத்தம் கொட்ட கொட்ட அவர்களை ரிங்கு தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த  28 வயதாகும் ரச்சனாவின் சகோதரர் ரவீந்திரபால் இதனிடையே தலையிட்டு தன் குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

வேறொருவருடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த 22 வயது காதலி: ஆத்திரத்தில் 19 வயது இளைஞர் செய்த கொடூரம்!

ரிங்கு அவரை துப்பாக்கியை எடுத்து நெஞ்சிலேயே சுட்டுள்ளார். சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரிங்கு அவர்களின் வீட்டை விட்டு தப்பி ஓடி 20 மீட்டர் தொலைவில் தன்னைத்தானே அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். தன்னை சுட்டுக்கொண்ட அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என போலீசார் தகவல் தெரிவித்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். எஸ்பி தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண் ரச்சனாவும் அவரது தாயார் மாயாவும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பிலிபிட் எஸ்பி தினேஷ் பி கூறுகையில், "முதல் கட்ட விசாரணையில் காதல் விவகாரம் என்று தெரிய வந்துள்ளது. இருவரது உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது, மேலும் தகவல்கள் விசாரணைக்கு பிறகு தெரியவரும்"என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!
சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!
கடலூரில் ரவுடி வெட்டிக்கொலை - வயல்வெளியில் சிதறிக்கிடந்த இரத்தம்; மக்கள் அதிர்ச்சி
கடலூரில் ரவுடி வெட்டிக்கொலை - வயல்வெளியில் சிதறிக்கிடந்த இரத்தம்; மக்கள் அதிர்ச்சி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Trump US Iran War: “நான் ஏன் அத உங்க கிட்ட சொல்லணும்.?“; செய்தியாளர்களிடம் கோபமடைந்த ட்ரம்ப்; அப்படி என்ன கேட்டாங்க.?
“நான் ஏன் அத உங்க கிட்ட சொல்லணும்.?“; செய்தியாளர்களிடம் கோபமடைந்த ட்ரம்ப்; அப்படி என்ன கேட்டாங்க.?
Velmurugan: லட்சக்கணக்கில் பேரம்.. வேல்முருகனுடன் டீல் பேசிய விஜய் தரப்பு.. நடந்தது என்ன?
Velmurugan: லட்சக்கணக்கில் பேரம்.. வேல்முருகனுடன் டீல் பேசிய விஜய் தரப்பு.. நடந்தது என்ன?
TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!
TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
AC Vs Cooler Vs Fan: வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Embed widget