மேலும் அறிய

வேறொருவருடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த 22 வயது காதலி: ஆத்திரத்தில் 19 வயது இளைஞர் செய்த கொடூரம்!

அவரது பெற்றோர் ரச்சனாவுக்கு வேறொரு நபருடன் திருமணத்தை நிச்சயம் செயதுள்ளனர். அந்த திருமணத்திற்கு தன்னை காதலித்த ரச்சனாவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்ததற்காக காதலி குடும்பத்தை கத்தியால் தாக்கி, சகோதரனை துப்பாக்கியால் சுட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 30) அன்று 19 வயது இளைஞர் ஒருவர் காதலியின் சகோதரனை கொன்று, அவரது குடும்ப உறுப்பினர்களைக் காயப்படுத்தி உள்ளார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் காதல் தோல்வியால் ஏற்பட்டிருக்கிறது என்று மூத்த காவல் துறை ஆய்வாளர் தினேஷ் பிரபு தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட ரிங்கு கங்வார், உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்த்தை சேர்ந்தவர் ஆவார். 22 வயதாகும் ரச்சனா கங்வார் அவருடன் காதல் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ரச்சனாவும் ரிங்குவும் சில நாட்களாகவே காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு அவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவிப்பதாக தெரியவில்லை.

வேறொருவருடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த 22 வயது காதலி:  ஆத்திரத்தில் 19 வயது இளைஞர் செய்த கொடூரம்!

இவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் இசையவில்லை. இதன் காரணமாக அவரது பெற்றோர் ரச்சனாவுக்கு வேறொரு நபருடன் திருமணத்தை நிச்சயம் செயதுள்ளனர். அந்த திருமணத்திற்கு தன்னை காதலித்த ரச்சனாவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. அதனை அறிந்த ரிங்கு கடும் ஆத்திரம் கொண்டுள்ளார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபமடைந்த ரிங்கு, காலை வேளையில் சிர்சா கிராமத்தில் உள்ள ரச்சனாவின் வீட்டிற்குள் புகுந்து, அவரையும் அவரது 50 வயது தாயார் மாயாதேவியையும் கத்தியால் தாக்கி உள்ளார். ரத்தம் கொட்ட கொட்ட அவர்களை ரிங்கு தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த  28 வயதாகும் ரச்சனாவின் சகோதரர் ரவீந்திரபால் இதனிடையே தலையிட்டு தன் குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

வேறொருவருடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த 22 வயது காதலி:  ஆத்திரத்தில் 19 வயது இளைஞர் செய்த கொடூரம்!

ரிங்கு அவரை துப்பாக்கியை எடுத்து நெஞ்சிலேயே சுட்டுள்ளார். சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரிங்கு அவர்களின் வீட்டை விட்டு தப்பி ஓடி 20 மீட்டர் தொலைவில் தன்னைத்தானே அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். தன்னை சுட்டுக்கொண்ட அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என போலீசார் தகவல் தெரிவித்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். எஸ்பி தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண் ரச்சனாவும் அவரது தாயார் மாயாவும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பிலிபிட் எஸ்பி தினேஷ் பி கூறுகையில், "முதல் கட்ட விசாரணையில் காதல் விவகாரம் என்று தெரிய வந்துள்ளது. இருவரது உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது, மேலும் தகவல்கள் விசாரணைக்கு பிறகு தெரியவரும்"என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget