மேலும் அறிய

அம்பேத்கர் நினைவு தினம்: குவிக்கப்பட்ட போலீசார்...! தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு!

மயிலாடுதுறை தலைஞாயிறு கிராமத்தில் அம்பேத்கர் மரியாதை செலுத்தும் நிகழ்வு எதிர்ப்பு காரணமாக 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய தலைவர்களை இன்னும் நம் நாட்டில் சாதிய  தலைவராக பார்க்கும் மனப்பான்மை இன்றளவும் மாறிய பாடில்லை. அதற்கு உதாரணமாக தேசிய தலைவர்களை சமூக ரீதியாக கொண்டாடும் மனநிலைமை தமிழகத்தில் பெருமளவு பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. அதன் காரணமாக இருவேறு சமூகங்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.


அம்பேத்கர் நினைவு தினம்: குவிக்கப்பட்ட போலீசார்...! தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு!

மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6 -ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.  விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து  இரண்டு சமூகத்தினர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து மேலும் கலவரம் ஏற்படாதவாறு தடுத்தனர். 

CJI DY Chandrachud: நானும் இந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்தேன்.. தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்ட ரகசியம்


அம்பேத்கர் நினைவு தினம்: குவிக்கப்பட்ட போலீசார்...! தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு!

இந்நிலையில் டிசம்பர் 6 -ம் தேதி அம்பேத்கர் தினைவு நாளன்று தலைஞாயிறு மதகடி பகுதியில் அவரது திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் அதே நாளில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி அனுமதி கோரி இருந்தனர். மேலும், அம்பேத்கர் நினைவு தின அனுசரிப்பு நிகழ்வுக்கு அனுமதி வழங்க கூடாது எனவும் மனு அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் இப்பிரச்சனை தொடர்பாக இருசமூகத்தினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 


அம்பேத்கர் நினைவு தினம்: குவிக்கப்பட்ட போலீசார்...! தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததாலும், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கடிதம் அளித்ததை தொடர்ந்து,  பொது அமைதி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மேலும், பொது மக்களுக்கு அச்சம்  ஏற்பட வழிவகுக்கும் என்பதால், பொது அமைதி சமூக நல்லிணக்கம், மக்கள் அச்சத்தைப் போக்கும் விதமாக தலைஞாயிறு கிராமம் மதகடி பகுதியிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 5 நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 05.12.2022 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 10.12.2022 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் 2 நபர்களுக்கு மேல் கூடி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டு, 144(3) தடை உத்தரவை அடுத்து அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FIFA WC 2022 Qatar: பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் வெற்றது குரோஷியா.. சோகத்துடன் வெளியேறியது ஜப்பான்

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
TN Election: 2021 Vs 2026 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்ன வித்தியாசம் - வாக்காளர் தொடங்கி வாக்குப்பெட்டி வரை
TN Election: 2021 Vs 2026 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்ன வித்தியாசம் - வாக்காளர் தொடங்கி வாக்குப்பெட்டி வரை
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
Top 10 News Headlines: சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
Embed widget