மேலும் அறிய

Crime: அரக்கனாக மாறிய தந்தை.. பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. 13 வயது சிறுமிக்கு நடுநடுங்கவைக்கும் கொடூரம்

ராஜஸ்தானில் 13 வயது சிறுமியை பெற்ற தந்தையும், இரண்டு இளைஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது கோடா நகரம். இந்த நகரத்தில் அரங்கேறிய பாலியல் குற்றம் மக்களை நடுநடுங்க வைத்துள்ளது. இந்த நகரத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். அவரது தந்தைக்கு 68 வயதாகிறது. சிறுமியின் தாயார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.

பாலியல் தொல்லை தந்த தந்தை:

இதன் காரணமாக, சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்தார். வீட்டில் சிறுமிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். 13 வயது சிறுமி என்றும் பாராமல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதனால், சிறுமி மிக கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று 13 வயது சிறுமியை தந்தை மிரட்டியுள்ளார். தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கடுமையான சிரமத்தை சந்தித்த சிறுமிக்கு 29 வயது இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

ஏமாற்றிய இளைஞர்கள்:

அவர் அந்த சிறுமியை அவரது தந்தையிடம் இருந்து காப்பாற்றுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். அதை நம்பிய அந்த சிறுமி அந்த இளைஞரை நம்பி வீட்டை விட்டு கடந்த மாதம் 22-ஆம் தேதி வெளியேறியுள்ளார். சிறுமியை ஏமாற்றி வீட்டை விட்டு அழைத்துச் சென்ற அந்த இளைஞர் தன்னுடைய மற்றொரு நண்பருடன் இணைந்து அந்த சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த இரு நபரிடம் இருந்து தப்பிய சிறுமி காவல்நிலையத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளார். சிறுமியிடம் காவல்துறை விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சிறுமியை வீட்டை விட்டு ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அந்த 2 நபர்கள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 பேர் கைது:

மகள் என்றும் பாராமல் பெற்ற மகளையே தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, அவரிடம் இருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து கற்றுத்தர வேண்டியது அவசியம் ஆகும். மேலும், பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்கள் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். 

மேலும் படிக்க: Crime: பெரியகுளம் அருகே போலீசாரை வெட்ட முயற்சித்த சம்பவம் - ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்

மேலும் படிக்க: கொத்து கொத்தாய் மனித எலும்பு கூடுகள் - கண்டறியப்பட்ட விடுதலை புலிகளின் ஆடைகள்: முல்லைத்தீவு அருகே அதிர்ச்சி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget