![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Stock Market Crash:சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை: முதல் 5 நிமிடத்தில் 2.51 லட்சம் கோடி அம்போ.. கலங்கிய முதலீட்டாளர்கள்
இன்றைய பங்குச் சந்தையானது சரிவுடன் தொடங்கி முடிவடைந்த போதும் சரிவிலே முடிவடைந்தது.
![Stock Market Crash:சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை: முதல் 5 நிமிடத்தில் 2.51 லட்சம் கோடி அம்போ.. கலங்கிய முதலீட்டாளர்கள் Stock Market Crash Investors Lost 2.51 Lakh Crore Wealth in first 5 minutes of trading Sensex Crash Stock Market Crash:சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை: முதல் 5 நிமிடத்தில் 2.51 லட்சம் கோடி அம்போ.. கலங்கிய முதலீட்டாளர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/10/a2e471ad7633104aa88ae4d99d64d2d0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி:
இன்று பங்குச் சந்தைகளானது காலையில் தொடங்கியது முதலே சரிவிலே தொடங்கியுது. பின்னர் முடிவடைந்த போதும் சரிவுடனே முடிவடைந்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்தனர். மேலும் முதல் 5 நிமிடத்தில் 2.5 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் இழந்தனர்.
சென்செக்ஸ்:
மும்பை பங்குச் சந்தை குறியீட்டான சென்செக்ஸ் நேற்று 55,320.28 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று மேலும் 1,016.84 புள்ளிகள் மேலும் குறைந்து 54, 303.44 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது.
நிஃப்டி:
தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி நேற்று 16,478.10 என்ற நிலையில் நிறைவடைந்தது. இன்று மேலும் 276.30 புள்ளிகள் குறைந்து 16,201.80 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது.
Sensex tanks 1,016.84 pts to end at 54,303.44; Nifty plunges 276.30 pts to 16,201.80
— Press Trust of India (@PTI_News) June 10, 2022
பங்கு சந்தைகள் வீழ்ச்சிக்கான காரணம்:
*அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், பெடரல் வாங்கியானது பணக்கொள்கையை கடுமையாக்க வாய்ப்புள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வருகின்றன.
* அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது ஒரு காரணமாகும்
Rupee falls 11 paise to close at record low of 77.85 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) June 10, 2022
*கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன் காரணமாகவும் சர்வேதச முதலீட்டாளர்கள், முதலீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றன.
நிபுணர்கள் கருத்து:
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்தது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், இந்த தருணத்தில் எந்தவொரு முடிவையும் டிரெடேர்கள் கவனத்துடன் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
Also Read: Manoj Modi: பிரதமர் நரேந்திர மோடியை தெரியும்; அம்பானியின் வலது கரம் மனோஜ் மோடியை தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)