மேலும் அறிய

Share Market : ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை...சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு...லாபத்தில் ஐசிஐசிஐ, எஸ்.பி.ஐ பங்குகள்...

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 379.15 அல்லது  0.51 % புள்ளிகள் உயர்ந்து 61,654.24 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 108.25 அல்லது 0.48% புள்ளிகள் உயர்ந்து 18,124.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் மூன்று நாட்களிலும் இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் இருந்தது. இந்நிலையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் பங்குசந்தை ஏற்றத்தில் தொடங்கியது முதலீட்டளார்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாபம்-நஷ்டம்

டெக் மகேந்திரா, ஓஎன்ஜிசி, அப்போலோ மருத்துவமனை, லார்சன், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹின்டல்கோ, சன் பார்மா, எம்எம், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், நெஸ்டீலே, ஐடிசி, பிபிசிஎல், கோல் இந்தியா, பிரட்டானியா, கிராசிம் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.‘

யுபிஎல், அல்ட்ரா டெக் சிமெண்ட், கிராசிம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

ஏற்றத்தில் பங்குச்சந்தை

அமெரிக்காவில் பணவீக்கம் நிலவி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தியதன் காரணமாக, இந்திய பங்கு சந்தை உயர்ந்ததாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்றைய வர்த்தக முடிவில், நிஃப்டியானது 18 ஆயிரத்தை தொட்டது. ஜனவரி  25ஆம் தேதியில் இருந்து நிஃப்டி புள்ளிகள் சரிவுடனே இருந்தன. இதனால் கடந்த சில நாட்களாகவே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிதாக பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், லாபம் ஈட்டுவதிலேயே ஆர்வத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் நிப்ஃடி புள்ளிகள்  நேற்று 18 ஆயிரத்தை தொட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 61,590.62 ஆகவும், நிஃப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 18,101 புள்ளிகளாகவும்  வர்த்தகமாகி வருகிறது.

ரூபாயின் மதிப்பு

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து 82.66 ரூபாயாக உள்ளது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget