மேலும் அறிய

RBI On Minimum Balance: வங்கிகளுக்கு வந்த கட்டுப்பாடு - இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் கிடையாது - ஆர்பிஐ அதிரடி

RBI On Minimum Balance: செயலற்ற வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என, இனி அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

செயலற்ற வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக, இனி அபராதக் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதோடு, செயலற்ற கணக்குகளை செயல்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, 2 ஆண்டுகளாக எந்தவித பரிவர்தனைகளும் நடைபெறாமல் இருக்கும் கணக்குகள், செயலற்ற வங்கிக் கணக்குகளாக கருதப்படுகின்றன. அந்தகைய கணக்குகள், தனித்தனி கணக்குப் புத்தகங்களில் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அதன் கீழ் செயல்படும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதோடு, உதவித்தொகை பணம் அல்லது நேரடி பலன் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாவிட்டாலும் செயலற்ற வங்கிக் கணக்காக கருதப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

இந்த அறிவுறுத்தல்கள் வங்கி அமைப்பில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் அளவைக் குறைப்பதற்கும், அத்தகைய வைப்புத்தொகையை அவற்றின் உண்மையான உரிமையாளர்கள்/உரிமையாளர்களுக்குத் திருப்பித் தருவதற்கும் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் முயற்சிகளை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு புதிய விதிகளின்படி, வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்குகள் செயலிழந்துவிட்டதை எஸ்எம்எஸ், கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். செயல்படாத கணக்கின் உரிமையாளர் பதிலளிக்காத பட்சத்தில், கணக்கு வைத்திருப்பவரை அறிமுகப்படுத்திய நபர் அல்லது கணக்கு வைத்திருப்பவரின் நியமனதாரர்களை தொடர்பு கொள்ளுமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டதால், கணக்குகளில் இருப்புத்தொகையானது மைனஸ் ஆக மாறாமல் பார்த்துக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும், வங்கிகள் தொடர்ந்து அபராதக் கட்டணங்களை விதித்த நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வங்கிகளில் இருப்புத்தொகை:

சமீபத்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, உரிமை கோரப்படாத டெபாசிட்கள் மார்ச் 2023 இன் இறுதியில் ரூ. 32,934 கோடியிலிருந்து 28% அதிகரித்து ரூ.42,272 கோடியாக உள்ளது.10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல்படாத டெபாசிட் கணக்குகளில் உள்ள ஏதேனும் இருப்பு, ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் வைப்பாளர் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிதிக்கு வங்கிகளால் மாற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விதிகள் எப்போது அமலுக்கு வரும்?

புதிய விதிகளின்படி, 'செயல்படாத கணக்கு என வகைப்படுத்தப்பட்ட எந்தக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக அபராதக் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. செயலற்ற கணக்குகளை செயல்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (03.06.2026): புதன்கிழமை.. பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (03.06.2026): புதன்கிழமை.. பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
GOLD AND SILVER RATE TODAY : 2 நாட்களாக தங்க நகை பிரியர்களுக்கு குஷி.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
2 நாட்களாக தங்க நகை பிரியர்களுக்கு குஷி.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
LIVE | Kerala Lottery Result Today (02.06.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி குலுக்கல்.. கொட்டி கொடுக்குமா? கோவிச்சுகிட்டு போயிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (02.06.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி குலுக்கல்.. கொட்டி கொடுக்குமா? கோவிச்சுகிட்டு போயிடுமா?
மயிலாடுதுறை மீனவர்களே அலர்ட்! ஜூன் 11 அன்று கடலுக்குப் போகாம கரையில் நிக்க வேண்டிய கட்டாயம்.. ஏன் தெரியுமா?
மயிலாடுதுறை மீனவர்களே அலர்ட்! ஜூன் 11 அன்று கடலுக்குப் போகாம கரையில் நிக்க வேண்டிய கட்டாயம்.. ஏன் தெரியுமா?

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ள ஐஐடியில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ள ஐஐடியில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
Embed widget