![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Petrol, Diesel Price in Chennai : சென்னையில் தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை...!
சென்னையில் தொடர்ந்து ஒரு வாரமாக பெட்ரோல் விலை உயர்ந்து இன்று லிட்டருக்கு ரூபாய் 106.66க்கு விற்கப்படுகிறது.
![Petrol, Diesel Price in Chennai : சென்னையில் தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை...! petrol and diesel price in chennai on 2nd november 2021 Petrol, Diesel Price in Chennai : சென்னையில் தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/02/e5e70c051e1fb317acb0b0a762282f65_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூபாய் 106.35க்கு விற்கப்பட்டது. டீசல் விலை ரூபாய் 102.59க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், புதிய மாதத்தின் இரண்டாவது நாளான இன்றும் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து ரூபாய் 106.66க்கு விற்கப்படுகிறது. டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூபாய் 102.59க்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மேலும் ரூபாய் 37 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்று கூறியிருந்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9-ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரி பங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)